கொல்லனழிசி. (பி-ம்.)1.’சிறுகுடிக’்;4.’துறைநரொடு சார்வாத’்.
(ப-ரை.)இ துறைகெழு சிறுகுடி - கடற்றுறை பொருந்திய இந்தச் சிற்றூர், கானல் அம் சேர்ப்பன் - கடற்கரைச் சோலையையுடைய சேர்ப்பனது, கொடுமை எற்றி - கொடுமையை நினைந்து, ஆனா துயரமொடு - மிகுகின்ற துன்பத்தோடு, வருந்தி - துயரமுற்று, பானாள் - நடுயாமத்தில், துஞ்சாது உறைநரொடு - துயிலாமல் தங்குவாரை, உசாவா - ஏனென்று வினாவாத, துயில்கண் மாக்களொடு - துயிலுதல் பொருந்திய கண்களையுடைய அறிவற்ற மக்களோடு, நெடு இரா உடைத்து - நெடிய இரவை உடையது, ஆதலின், உறைபதி அன்று - இது நாம் தங்கியிருத்தற்குரிய ஊர் அன்று.
(முடிபு) இச்சிறுகுடி துயிற்கண் மாக்களொடு நெட்டிராவுடைத்து; உறைபதியன்று.
(கருத்து) தலைவர் இல்லாமையால் இவ்வூர் நமக்கு இனி உறையும்பதி அன்று.
(வி-ரை.) “புல்வேய் குரம்பை, ஊரென வுணராச் சிறுமை” (அகநா. 200: 2-3) யுடைத்தாதலின், சிறுகுடியென்றாள். கொடுமை - பிரிவின் கண் நீட்டித்தல்; (குறள்.1169, பரிமேல்.) எற்றி - நினைந்து