பக்கம் எண் :


37


    3. பெறுகதில்லம்ம: ‘‘பெறுகதில் லம்மவிவ் வூருமோர் பெற்றி’’ (சிலப். 24: பாட்டுமடை.)

    4-5. மறுகில் மடலேறுதல்; குறுந். 17: 1-3, ஒப்பு.

    4-6. மடலேறும்போது தலைவனுக்குரிய தலைவியை ஊரினர் அறிதல்: ‘‘இன்னாள் செய்த திதுவென முன்னின், றவள்பழி நுவலு மிவ்வூர்’’ (குறுந்.173;5-6)

(14)
  
(தலைவி தமரைப் பிரிந்து தலைவனுடன் சென்றதைத் தோழியால்அறிந்த செவிலி, ‘‘நம் மகளும் அவள் அன்பனும் பாலையைக் கடந்து சென்று இதற்குள் மணம் புரிந்து கொண்டிருப்பர்; அதனால் அவர்களுடைய நட்பு உலகறிய உறுதி பெற்றதாகும்’’ என்று நற்றாய்க்குக் கூறியது.)
 15.    
பறைபடப் பணில மார்ப்ப விறைகொள்பு  
    
தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய  
    
நாலூர்க் கோசர் நன்மொழி போல  
    
வாயா கின்றே தோழி யாய்கழற்  
5
சேயிலை வெள்வேல் விடலையொடு  
    
தொகுவளை முன்கை மடந்தை நட்பே. 

என்பது உடன்போயின பின்றைத் தோழி செவிலிக்கு அறத்தொடுநின்றாள்; நிற்பச் செவிலித் தாய் நற்றாய்க்கு அறத்தொடு நின்றது.

    (உடன் போயின பின்றை- தலைவி தன் தமரைப் பிரிந்து தலைவனுடன் போன பின்பு, அறத்தொடு நிற்றல்- தலைவி இன்ன தலைவனுடன் நட்புப் பூண்டு சென்றாள் என்ற உண்மையைக் கூறி அத் தலைவியின் கற்பிற்குச் சார்பாக நிற்றல், நற்றாய் -தலைவியை ஈன்ற தாய்.)

ஒளவையார்.

    (பி-ம்.) 3. ‘நல்லூர்க்’ 6. ‘தொடுவளை முன்கை நம்’

     (ப-ரை.) தோழி-, ஆய்கழல்-அழகிய வீரக் கழலை யும், செ இலை-செம்மையாகிய இலையை உடைய, வெள்வேல்- வெள்ளிய வேலையும் கொண்ட, விடலையொடு- தலைவனோடு, தொகுவளை முன்கை-பலவாகத்தொக்க வளைகளைப் பூண்ட முன் கைகளை உடைய, மடந்தை நட்பு- நின்மகள் செய்த நட்பானது, தொல் முது ஆலத்து பொதியில்-மிகப்பழைய ஆல மரத்தடியின் கண் உள்ள பொதுவிடத்தில், இறைகொள்பு தோன்றிய-தங்குதலைக் கொண்டு தோன்றிய, நாலூர் கோசர் நன்மொழி போல- நான்கு ஊரில் உள்ள கோசரது நன்மையை உடைய மொழி உண்மையாவதைப் போல, பறை பட-