பக்கம் எண் :


39


ே்வல்’’(புறநா.180:13.) 4-5. கழல்விடலை: ‘‘வில்லோன் காலன கழலே’’(குறுந்.7:1) 6. தொகுவளை: ‘‘தொக்க வளையுமுடைத் தொன்மைக் கோலம்’’(திருவா.கோத்தும்பி) வளைமுன்கை: குறுந்.56:3.4-6.விடலை யொடு நட்பு வாயாதல்: குறுந் .3.

(15)
  
(பொருள் ஈட்டும் பொருட்டுத் தலைவன் பிரிந்த காலத்தில், ‘அவர் நம்மை நினைப்பாரோ, நினையாரோ’என்று கருதிக் கவலையுற்ற தலைவியை நோக்கி, ‘‘அவர் சென்ற பாலை நிலத்தில் ஆண் பல்லி பெண் பல்லியை அழைத்தலைக் கேட்டு நின்னை நினைந்து மீண்டு வருவர்’’என்று கூறி ஆற்றுவித்தது.)
 16.    
உள்ளார் கொல்லோ தோழி கள்வர்தம் 
     
பொன்புனை பகழி செப்பங் கொண்மார்  
     
உகிர் நுதி புரட்டு மோசை போலச்  
     
செங்காற் பல்லி தன்றுணை பயிரும்  
5
அங்காற் கள்ளியங் காடிறந் தோரே. 

என்பது பொருள்வயிற் பிரிந்த இடத்துத் தலைமகள் ஆற்றாமை கண்டு தோழி கூறியது.

பாலை பாடிய பெருங்கடுங்கோ.

     (பி -ம். ) 1.‘கானவர்’, ‘கணவர்தம்’; 2. ‘காண்மார’்

     (ப-ரை.) தோழி -, கள்வர் - ஆறலை கள்வர், செப்பம் கொண்மார் - செப்பஞ் செய்யும் பொருட்டு, தம் பொன் புனை பகழி - இரும்பினால் செய்யப்பட்ட தம் அம்பை, உகிர் நுதி - நக நுனியிலே, புரட்டும் ஓசை போல -புரட்டுதலால் உண்டாகிய ஒலியைப் போல, செ கால் பல்லி - செம்மையாகிய காலை உடைய ஆண் பல்லியானது, தன் துணைபயிரும் - தன் துணையாகிய பெண் பல்லியை அழைத்தற்கு இடமாகிய, அம் கால் - அழகிய அடியை உடைய, கள்ளியங்காடு இறந்தோர் - கள்ளிகளை உடைய பாலையைக் கடந்து பொருள்வயிற் சென்ற தலைவர், உள்ளார் கொல் - நம்மை நினையாரோ?

     (முடிபு) தோழி, காடிறந்தோர் உள்ளார்கொல்?

     (கருத்து) தலைவர் விரைவில் வந்து விடுவர்.

     (வி-ரை.) பொன் என்றது இரும்பை; ‘‘பொன்னிற் புனை தோட்டியான்’’, ‘‘விளங்குபொன் னெறிந்த நலங்கிளர் பலகை’’(புறநா.14:3, 15:12) என்பவற்றையும் அவற்றின் உரைகளையும், ‘‘மின்னுந் தமனியமும் வெற்றிரும்பு மொன்றாகிப், பொன்னின் பெயர்படைத்தாற் போலாதே’’