பேரெயின் முறுவலார். (பி-ம்.) 4. ‘காழ்கொளினே’.
(ப-ரை.) காமம் காழ்க்கொளின் - காம நோயானது முதிர்வுற்றால், மடலும் - பனை மடலையும், மா என -குதிரை எனக் கொண்டு, ஊர்ப - ஆடவர் அதனை ஊர்வர்; குவி முகிழ் எருக்கங் கண்ணியும் - குவிந்த அரும்பை உடைய எருக்கம் பூ மாலையையும், பூ என - அடையாள மாலையைப் போல, சூடுப - தலையில் அணிந்து கொள்வர்; மறுகின் ஆர்க்கவும் படுப - வீதியில் பிறர் தம்மைக் கண்டு