பக்கம் எண் :


293


     3. குறும்பல: நற்.261:4; புறநா: 159:3; சிலப். 10:39, 12:3.

     4. குன்று கெழு சிறு நெறி: “வரைசேர் சிறுநெறி” (அகநா. 123:3)

     6. பொருட்பிரிவு இளமையின்பத்தைக் கெடுக்கும்: குறுந். 126:1, ஒப்பு; நற்.46; கலி.18: 7-8.

     5-6. “மறப்பருங் காத லிவளீண் டொழிய, இறப்பத் துணிந்தனிர்” (கலி. 2; 9-10.)

(151)
  
(தலைவன் நெடுங்காலம் வரையாது இருந்தமையின் வருந்திய தன்னை இடித்துரைத்த தோழியை நோக்கி முன்னிலைப் புறமொழியாக, “என்னை இடித்துரைப்போர் காமத்தின் தன்மையையும் தலைவர் உடனுறைவதன் இன்றியமையாமையையும் உணர்ந்திலர்” என்று தலைவி கூறியது.)
 152.   
யாவது மறிகிலர் கழறு வோரே  
    
தாயின் முட்டை போலவுட் கிடந்து 
    
சாயி னல்லது பிறிதெவ னுடைத்தோ 
    
யாமைப் பார்ப்பி னன்ன 
5
காமங் காதலர் கையற விடினே. 

என்பது வரைவு நீட்டித்தவழி (பி-ம். நீட்டிய வழி ) ஆற்றாளாகிய தலைமகள், “நீ ஆற்றுகின்றிலை” என்று நெருங்கிய தோழிக்குச் சொல்லியது.

     (நெருங்கிய - இடித்துரைத்த.)

கிளி மங்கலங் கிழார் (பி-ம். கிழிமங்கலங்கிழார், கழிமங்கலங்கிழார், கிள்ளிமங்கலங்கிழார்.)

     (ப-ரை.) யாமை பார்ப்பின் அன்ன காமம் - தாய்முகம் நோக்கி வளருந் தன்மையையுடைய ஆமையின் பார்ப்பைப் போலத் தலைவரைப் பல்காற் காண்டலால் வளருந்தன்மையையுடைய காமமானது, காதலர் கையற விடின் - அவர் நாம் செயலறும்படி நம்மைப் பிரிந்து கைவிட்டால், தாய் இல் முட்டை போல - தாயில்லாத முட்டை கிடந்தபடியே அழிவது போல, உள் கிடந்து சாயின் அல்லது - உள்ளத் துள்ளே கிடந்து மெலியினன்றி, பிறிது எவன் உடைத்து - வேறு என்ன உறுதியை உடையது? கழறுவோர் - என்னை இடித்துரைப்போர், யாவதும் - இதனைச் சிறிதேனும், அறிகிலர் - அறிந்திலர்.

     (முடிபு) காமம், காதலர் விடின், சாயினல்லது பிறிதெவனுடைத்து? கழறுவோர் யாவதும் அறிகிலர்.