பக்கம் எண் :


296


     நடுங்கி”, “இரவுக் குறிவயின், வெருவக் குழறிய விழிகட் கூகைக், கடுங்குர லறியாள் கதுமென நடுங்கினள்” (பெருங். 3. 14:151-6, 22:150-52.)

    ஆண்குரங்கு பாய மகளிர் அஞ்சுதல்:“கருமுக முசுக்கலை கதுமெனத் தோன்ற, இன்னதென் றுணரா ணன்னுத னடுங்கி”, “முகத்தே வந்தோர் முசுக்கலை தோன்ற, அகத்தே நடுங்கி யழற்பட வெய்துயிர்த்து” (பெருங். 2.16:109-10, 19:167-8.)

     3-5. தலைவனோடு நெஞ்சு அவன் செல்லும் வழியிற் செல்லுதல்: “சாரல் விலங்குமலை யாரா றுள்ளுதொறும், நிலம்பரந் தொழுகுமென் னிறையி னெஞ்சே” (நற். 154:10-12); “நன்னர் நெஞ்சம், என்னொடு நின்னொடுஞ் சூழாது கைம்மிக், கிறும்புபட் டிருளிய விட்டருஞ் சிலம்பிற், குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடிக், கானநாடன் வரூஉம்யானைக், கயிற்றுப் புறத்தன்ன கன்மிசைச் சிறுநெறி, மாரி வானந் தலைஇ நீர்வார், பிட்டருங் கண்ண படுகுழி யியவின், இருளிடை மிதிப்புழி நோக்கியவர், தளரடி தாங்கிய சென்ற தின்றே”(அகநா. 128:6-15)

(153)
  
(பொருளீட்டும் பொருட்டுத் தன்னைப் பிரிந்து சென்ற தலைவனை நினைந்து, “என்னைப் பிரிந்து நெடுந்தூரத்தில்தங்கும் வன்மையை அவர் எங்ஙனம் பெற்றார்?” என்று தலைவி தோழியை நோக்கிக் கூறியது.)
 154.   
யாங்கறிந் தனர்கொ றோழி பாம்பின் 
    
உரிநிமிர்ந் தன்ன வுருப்பவி ரமையத் 
    
திரைவேட் டெழுந்த சேவ லுள்ளிப் 
    
பொறிமயி ரெருத்திற் குறுநடைப் பேடை 
5
பொரிகாற் கள்ளி விரிகா யங்கவட்டுத் 
    
தயங்க விருந்து புலம்பக் கூஉம் 
    
அருஞ்சுர வைப்பிற் கானம் 
    
பிரிந்துசே ணுறைதல் வல்லு வோரே. 

என்பது பொருள்வயிற் பிரிந்த தலைமகனை நினைந்து தலைமகள் தோழிக்கு உரைத்தது.

மதுரைச் சீத்தலைச் சாத்தன்.

     (பி-ம்.)3.‘லுன்னிப்’; 5. ‘பொரிக்காற்’.

     (ப-ரை.) தோழி-, பாம்பின் உரி நிமிர்ந்தன்ன - பாம்பினது உரி மேலெழுந்தாற் போன்ற, உருப்பு அவிர் அமையத்து - கானல் விளங்குகின்ற நண்பகற் காலத்தில், இரை வேட்டு எழுந்த சேவல் உள்ளி - இரையை விரும்பி மேலெழுந்து பறந்து சென்ற ஆண் பறவையை நினைந்து, பொறி மயிர் எருத்தின் - புள்ளிகளையுடைய மயிர் பொருந்திய கழுத்தையும், குறுநடை - குறுக அடியிடும் நடையினையும் உடைய, பேடை - பெண்புறாவானது, பொரி கால் கள்ளி -