பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன். (பி-ம்.) 3. ‘தாழ்மண்டிலத்துப்’; 4. ‘படிம’; 5. ‘னின்செயலுள்ளும்’.
(ப-ரை.) பார்ப்பன மகனே பார்ப்பன மகனே---, செ பூ முருக்கின் - செம்மையாகிய பூவையுடைய புரச மரத்தினது, நல் நார் களைந்து - நல்ல பட்டையை நீக்கி விட்டு, தண்டொடு பிடித்த - அதன் தண்டோடு ஏந்திய, தாழ் கமண்டலத்து - தாழ்கின்ற கரகத்தையும், படிவம் உண்டி - விரதவுணவையுமுடைய, பார்ப்பன மகனே-, எழுதா கற்பின் - வேதத்தையறிந்த, நின் சொல்லுள்ளும் - நின்னுடைய அறிவுரைகளுள், பிரிந்தோர் புணர்க்கும் - பிரிந்த தலைவியரையும் தலைவர்களையும் சேரச் செய்யும், பண்பின் - தன்மையையுடைய, மருந்தும் உண்டோ - பரிகாரமும் இருக்கின்றதோ? இது - இங்ஙனம் நீ கழறுதல், மயல் - மயக்கத்தால் வந்ததாகும்.
(முடிபு) பார்ப்பன மகனே, பார்ப்பன மகனே, பார்ப்பன மகனே, நின் சொல்லுள்ளும் மருந்துமுண்டோ? இது மயல்.
(கருத்து) நீ என்னை இடித்துரைத்தலால் வரும் பயன் யாதும் இல்லை.
(வி-ரை.) இது பார்ப்பனப் பாங்கன் காமநிலை யுரைத்துத் தேர்நிலை யுரைத்த போது (தொல். கற்பு. 36) தலைவன் கூறியது. முருக்கென்றது