பக்கம் எண் :


301


புரச மரத்தை; இது பலாசென்றும் கூறப்படும். தாழ் கமண்டலம் - உறியிலே தாழ்ந்த கமண்டலம்; "உறித் தாழ்ந்த கரகமும்’ (கலி. 9:2.) எழுதாக் கற்பு - எழுதாக் கிளவியைக் கற்ற கல்வி; அதாவது வேத முணர்தல். மருந்து - பரிகாரம்; "மருந்தில் கூற்றம்" (புறநா. 3:12.) மருந்துமுண்டோ வென்ற உம்மை பயனற்ற இடித்துரையே யன்றிப் பரிகாரமும் உண்டோவென்னும் பொருட்பயன் உடையது. ‘நாம் இடித்துரைத்தால் இவன் கொண்ட காமம் நீங்கும்' என்று பாங்கன் எண்ணிய எண்ணத்தை மயலென்றான். உண்டோ: ஓகாரம் எதிர்மறைப் பொருளது; மயலோ: ஓ அசை நிலை.

    பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் மருந்தும் உண்டோவென்றது என்னையும் தலைவியையும் சேர்த்து வைக்கும் முயற்சியே பயன்படுவதென்னும் குறிப்பையுடையது; எனவே நீ கழறுவதொழிந்து அது செய்க என்றானாயிற்று.

    (மேற்கோளாட்சி) 1. முறைமை சுட்டா மகனென்னும் பெயர் ஏகாரம் பெற்று விளியேற்றது (தொல். விளி. 18, தெய்வச். ); உயர்திணைப் பெயர் ஏகார விளி யுருபு பெற்று வந்தது (நன். 304, மயிலை.)

    4. முறைமை சுட்டா மகனென்பது விளிவேற்றுமைக்கண் ஏகாரம் பெற்றுவந்தது (தொல். விளி. 12, ந.; இ.வி.207.)

    3-4. அந்தணர்க்குக் கரகமும் முக்கோலும் உரியவை (தொல். மரபு. 70, பேர்.)

    ஒப்புமைப் பகுதி 2. நாரென்பது பட்டைக்கு வருதல்: குறுந். 112:4, 274:5.

    4. படிவவுண்டிப் பார்ப்பன மகன்: "படிவப் பார்ப்பான்" (முல்லைப். 37.)

    6. பிரிந்தோர்ப் புணர்த்தல்: குறுந். 146:2.

(156)
  
(பூப்பு எய்திய தலைமகள் அதனை மறைத்துக் கூறுவாளாய், “வைகறை வந்தது; இனித் தலைவனைப் பிரியநேருமென்று அஞ்சுகின்றேன்” என்று சொல்லியது.)
 157.    
குக்கூ வென்றது கோழி யதனெதிர் 
    
துட்கென் றன்றென் றூய நெஞ்சம் 
    
தோடோய் காதலர்ப் பிரிக்கும் 
    
வாள்போல் வைகறை வந்தன்றா லெனவே. 

என்பது பூப்பெய்திய தலைமகள் உரைத்தது.

அள்ளூர் நன்முல்லை (பி-ம். அள்ளூர் நன்மூலன்.)

    (பி-ம்) 2. ‘றற்றென்’, ‘றூஉய’; 4. ‘வான்போல்’.

    (ப-ரை.) கோழி-, குக்கூ என்றது - குக்கூவென்று கூவியது; அதன் எதிர் - அதற்கு நேரே, தோள் தோய்