பக்கம் எண் :


310


    (மேற்கோளாட்சி) 1-4. தலைவியிடத்துக் காதல் கையிகந்து பெருகுதலால் துயிலா நின்றுழியும் ஒன்று கூறிச் செவிலி அரற்றியது இது; ‘பொழுது மெல்லின் றென்பதனுள் புதல்வற்புல்லி அன்னாயென்று தலைவியை விளித்தது கனவின் அரற்ற லாயிற்று’ (தொல். களவு. 24, ந.)

    7.உவமையில் திணை மயங்கி வந்தது (தொல். உவம.6, பேர்.)

    5-7.. துஞ்சிச் சேர்தல் என்னும் மெய்ப்பாடு வந்தது;‘என்ன காரியம் மேற்கொண்டு வந்தானென்றமையின் இது துஞ்சிச் சேர்தலாயிற்று; அல்லாக்கால் அங்ஙனஞ் சொல்லுதல் அன்பழிவெனப்படும்’ (தொல். மெய்ப். 23, பேர்; இ.வி.580.)

    மு. காப்பு மிகுதிக்கண் மனையகப்பட்டுக் கலங்கி உணர்வு அழிந்த வழித் தலைவி ஆராய்ச்சி யுடையதாகிய அருமறையினைத் தோழிக்குக் கூறியது (தொல். களவு. 21, இளம், 20, ந.)

    ஒப்புமைப் பகுதி 1. பொழுதும் எல்லின்று; “எல்லின்று பொழுதே”(நற். 264:6, அகநா.224:1) “எல்லு மெல்லின்று” (குறுந். 179:2, 390:1); அகநா. 110;11, 370:2,

    3. புலிப்பற்றாலி: “புலிப்பற் கோத்த புலம்புமணித் தாலி” (அகநா. 7:18); “புலிப்பற் றாலிப் புன்றலைச் சிறாஅர்” (புறநா. 374:9); “மறங்கொள் வயப்புலி வாய்பிளந்து பெற்ற, மாலை வெண்பற் றாலி” (சிலப். 12: 27-8); “போதிற் பொலியுந் தொழிற்புலிப் பற்குரற் பொற்றொடியே” (திருச்சிற். 239.)

    6. ஆரம் நாறும் மார்பினன்: குறுந். 198:7, 321:1, கலி. 52:7,15. 5-6. நற். 344:5-7.

    7. யானை தலைவனுக்கு: குறுந். 244:2; அகநா. 308:15.

     மாரியானை: நற். 141:2

(161)
  
(தலைவியைப் பிரிந்த தலைமகன் தான் மேற்கொண்ட செயல் முடித்து மீளும்பொழுது வழியில் அரும்பியிருந்த முல்லையைப் பார்த்து, ‘நீ தனித்திருப்போரை நோக்கி அரும்பால் எள்ளி நகையாடல் தகுமோ?” என்று கூறியது.)
 162.   
கார்புறந் தந்த நீருடை வியன்புலத்துப்  
    
பலர்புகு தரூஉம் புல்லென் மாலை  
    
முல்லை வாழியோ முல்லை நீநின்  
    
சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை  
5
நகுவை போலக் காட்டல்  
    
தகுமோ மற்றிது தமியோர் மாட்டே.  

என்பது வினைமுற்றி மீளும் தலைமகன் முல்லைக்குரைப்பானாய் உரைத்தது.