பக்கம் எண் :


329


    2. நூன் மாலை மா: “மணிப்பீலி சூட்டிய நூலொடு”, “பிடியமை நூலொடு பெய்ம்மணி கட்டி “ (கலி. 138:8, 140:6.) பனை படு கலிமா; குறுந். 17:1. ஒப்பு. 182:1.

    1-2. மடன்மாவிற்கு ஆவிரம் பூ அணிதல்: “அணிப்பூளை யாவிரை யெருக்கொடு பிணித்தியாத்து”, “அணியலங் காவிரைப் பூவோ டெருக்கின், பிணையலங் கண்ணி மிலைந்து” (கலி. 138:9, 139:8-9);“பனிவா ராவிரை பன்மலர் சேர்த்தி” (குணநாற்பது.)

    3. மடல் மாவிற்கு மணி கட்டுதல்: “மணியணி பெருந்தார் மரபிற்பூட்டி” (குறுந். 182:2); “சிறுமணி தொடர்ந்து .. உண்ணா நன்மாப்பண்ணி” (நற். 220:1-3); “மணியார்ப்ப, ஓங்கிரும் பெண்ணை மடலூர்ந்து”, “பெய்ம்மணி கட்டி” (கலி. 139:9-10, 140:6.)

    மடலேறும் தலைவன் நாணத்தை நீத்தல்: “பெருநா ணீக்கி”(குறுந். 182:4); “அறிவுநம் மறிவாய்ந்த வடக்கமு நாணொடு, வறிதாக”(கலி. 138:3-4); “நோனா வுடம்பு முயிரு மடலேறும், நாணினை நீக்கி நிறுத்து’ (குறள், 1132.)

    4. அழிபடர்: குறுந். 185:8; அகநா. 255:8, 285:2, 297:2. வழிவழி சிறத்தல்: மதுரைக். 194; அகநா. 47:1.

    5. இன்னள்: குறுந். 98:1, 185:3, 296:7.

    2-6. குறுந். 17:1-3, ஒப்பு.

(173)
  
(தலைவன் பொருள்வயிற் பிரியக் கருதியிருப்பதையுணர்ந்து கூறிய தோழியை நோக்கி, “பாலை நிலத்து வழிகள் கடத்தற்கரியன வென்று எண்ணாமல் நம்மை அவர் பிரிந்து செல்வரேல், உலகத்தில் பொருள்தான் பெற்றகுரியது போலும்! அருள் யார் பாலுமின்றி ஒழிவது போலும்!”என்று தலைவி கூறியது.)
 174.   
பெயன்மழை துறந்த புலம்புறு கடத்துக் 
    
கவைமுட் கள்ளிக் காய்விடு கடுநொடி 
    
துதைமென் றூவித் துணைப்புற விரிக்கும் 
    
அத்த மரிய வென்னார் நத்துறந்து 
5
பொருள்வயிற் பிரிவா ராயினிவ் வுலகத்துப் 
    
பொருளே மன்ற பொருளே 
    
அருளே மன்ற வாருமில் லதுவே. 

என்பது பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

வெண்பூதி.

    (பி-ம்) 1.‘புலம்பறு’; 2.‘கவைமுடக்’. ‘கடிநொடி’;4. ‘வெண்ணார்’.

    (ப-ரை.) தோழி -, பெயல் மழை - பெய்தலையுடையமழை, துறந்த - பெய்யாது நீங்கிய, புலம்பு உறு கடத்து -