வருமுலையாரித்தி. (பி-ம்) 2.‘பனிமொழி’; 3.‘நெகிழ்ந்த’; 6.‘வேறுபுனல்’. ‘புலநன்னாட்டுப்’. புலநாட்டுப்; 7.கலுழும்.
(ப-ரை.) ஒருநாள் வாரலன் - ஒருநாள் வந்தானல்லன்;இருநாள் வாரலன் - இரண்டு நாட்கள் வந்தானல்லன்; பலநாள் வந்து - பல நாட்கள் வந்து, பணிமொழி பயிற்றி - பணிவைப் புலப்படுத்தும் மொழிகளைப் பல்காற் கூறி, என்நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றை - எனது நன்மையையுடைய நெஞ்சத்தை இரங்கச் செய்தபிறகு, வரை முதிர்தேனின் போகியோன் - மலையினிடத்தில் முதிர்ந்து வீழ்ந்ததேனிறாலைப் போலப் போயினவனும், ஆசு ஆகு எந்தை - நமக்குப் பற்றுக் கோடாகிய எந்தையுமாகிய தலைவன்,யாண்டு உளன் கொல் - எங்கே இருக்கின்றானோ? வேறுபுலன் நல்நாட்டு பெய்த - வேற்றுப் புலங்களையுடையநல்ல நாட்டிற்பெய்த, ஏறுடை மழையின் - இடியேற்றையுடைய மழைநீர் கலங்கி வருவது போல, என் நெஞ்சு -,கலிழும் - கலங்கும்.
(முடிபு) போகியோன், எந்தை, யாண்டுளன் கொல்? என் நெஞ்சு கலிழும்.