பக்கம் எண் :


340


   
உரவுச்சினஞ் செருக்கித் துன்னுதொறும் வெகுளும் 
  
முளைவா ளெயிற்ற வள்ளுகிர் ஞமலி 
  
திளையாக் கண்ண வளைகுபு நெரிதர”            (குறிஞ்சிப். 128-32) 

என்பதனால் உணரலாகும்.

    செல்லலென்றும், உதுவெம் மூரென்றும் கூறியதனால், நீ போகாமல்எம்முடன் வந்து இரவில் தங்கிச் செல்வாயாக வென்றாளாயிற்று. இதனால்இடையறாது உடனுறைய வேண்டுமென்னும் தம் விருப்பத்தை உணர்த்தி,அங்ஙனம் இருத்தற்கு ஏற்ற நிலை வரைந்துகொண்டு இல்லறம் நடத்தலேயென்பதை உய்த்துணர வைத்தாள்; வைத்தமையின், இது வரைவுகடாவியதாயிற்று.

    ஒப்புமைப் பகுதி 1. கல்லென் கானம்: “கல்லென் கடத்திடை”(மலைபடு. 415.)

     கானத்துக் கடமா ஆட்டல்: “வெட்சிக் கானத்து வேட்டுவ ராட்டக்,கட்சி காணாக் கடமா நல்லேறு” (புறநா. 202:1-2.)

    2. எல்லும் எல்லின்று: குறுந். 390:1; அகநா. 110:11.

     தலைவனுடன் நாய் வருதல்: அகநா. 118:5, 182:5, 388:14-5.

    3. உது வெம்மூர் :“அஃதெம்மூர்” (அகநா. 38:17.)

    4. ஓங்குவரை யடுக்கம்: (குறுந். 69:4); “நெடுமலையடுக்கம்” (அகநா. 92:1.)

    4-5. அடுக்கத்துக் கழை: “கழைவள ரடுக்கம்” (அகநா. 82:9.)

     தேனடையைக் கழை கிழித்தல்: “காம்பு கால்பொரக் கண்ணகன்மால்வரைப், பாம்பு நான்றெனப் பாய்பசுந் தேறலே” (கம்ப. நாட்டுப். 35.)

    5-6. யானை மூங்கிலை உண்ணுதல்: நற். 116:4-5; அகநா. 85:7-8; 148:13, 218:2-3, 328:13, 332:1-2; புறநா. 73:9; 80:7.

(179)
  
(தலைவனது பிரிவினால் வருந்திய தலைவியை நோக்கி, “அவர்சென்ற விடத்தில் தாம் கருதிச் சென்ற பொருளைப் பெற்றனரோ; இலரோ;பெற்றனராயின் உடனே மீண்டு வருவார்” என்று தோழி கூறிவற்புறுத்தியது.)
 180.   
பழூஉப்பல் லன்ன பருவுகிர்ப் பாவடி  
    
இருங்களிற் றினநிரை யேந்தல் வரின்மாய்ந்  
    
தறைமடி கரும்பின் கண்ணிடை யன்ன  
    
பைத லொருகழை நீடிய சுரனிறந்  
5
தெய்தினர் கொல்லோ பொருளே யல்குல்  
    
அவ்வரி வாடத் துறந்தோர்  
    
வன்பராகத்தாஞ் சென்ற நாட்டே.  

என்பது பிரிவிடை வேறுபட்டாளைத் தோழி வற்புறுத்தியது.