| உரவுச்சினஞ் செருக்கித் துன்னுதொறும் வெகுளும் |
| முளைவா ளெயிற்ற வள்ளுகிர் ஞமலி |
| திளையாக் கண்ண வளைகுபு நெரிதர” (குறிஞ்சிப். 128-32) |
என்பதனால் உணரலாகும்.
செல்லலென்றும், உதுவெம் மூரென்றும் கூறியதனால், நீ போகாமல்எம்முடன் வந்து இரவில் தங்கிச் செல்வாயாக வென்றாளாயிற்று. இதனால்இடையறாது உடனுறைய வேண்டுமென்னும் தம் விருப்பத்தை உணர்த்தி,அங்ஙனம் இருத்தற்கு ஏற்ற நிலை வரைந்துகொண்டு இல்லறம் நடத்தலேயென்பதை உய்த்துணர வைத்தாள்; வைத்தமையின், இது வரைவுகடாவியதாயிற்று.
ஒப்புமைப் பகுதி 1. கல்லென் கானம்: “கல்லென் கடத்திடை”(மலைபடு. 415.)
கானத்துக் கடமா ஆட்டல்: “வெட்சிக் கானத்து வேட்டுவ ராட்டக்,கட்சி காணாக் கடமா நல்லேறு” (புறநா. 202:1-2.)
2. எல்லும் எல்லின்று: குறுந். 390:1; அகநா. 110:11.
தலைவனுடன் நாய் வருதல்: அகநா. 118:5, 182:5, 388:14-5.
3. உது வெம்மூர் :“அஃதெம்மூர்” (அகநா. 38:17.)
4. ஓங்குவரை யடுக்கம்: (குறுந். 69:4); “நெடுமலையடுக்கம்” (அகநா. 92:1.)
4-5. அடுக்கத்துக் கழை: “கழைவள ரடுக்கம்” (அகநா. 82:9.)
தேனடையைக் கழை கிழித்தல்: “காம்பு கால்பொரக் கண்ணகன்மால்வரைப், பாம்பு நான்றெனப் பாய்பசுந் தேறலே” (கம்ப. நாட்டுப். 35.)
5-6. யானை மூங்கிலை உண்ணுதல்: நற். 116:4-5; அகநா. 85:7-8; 148:13, 218:2-3, 328:13, 332:1-2; புறநா. 73:9; 80:7.
(179)
(தலைவனது பிரிவினால் வருந்திய தலைவியை நோக்கி, “அவர்சென்ற விடத்தில் தாம் கருதிச் சென்ற பொருளைப் பெற்றனரோ; இலரோ;பெற்றனராயின் உடனே மீண்டு வருவார்” என்று தோழி கூறிவற்புறுத்தியது.) 180. | பழூஉப்பல் லன்ன பருவுகிர்ப் பாவடி |
| இருங்களிற் றினநிரை யேந்தல் வரின்மாய்ந் |
| தறைமடி கரும்பின் கண்ணிடை யன்ன |
| பைத லொருகழை நீடிய சுரனிறந் |
5 | தெய்தினர் கொல்லோ பொருளே யல்குல் |
| அவ்வரி வாடத் துறந்தோர் |
| வன்பராகத்தாஞ் சென்ற நாட்டே. |
என்பது பிரிவிடை வேறுபட்டாளைத் தோழி வற்புறுத்தியது.