பக்கம் எண் :


344


    எருமை கட்டப்பட்ட தன் குழவியினின்றும் அகலாமல் அருகிலேயுள்ள பயிரை ஆரும் ஊரனென்றது, தலைவன் இல்லின் கண் உறையும்தலைவிபாற் கொண்ட அன்பு குறையாமல் தனக்கு வேண்டிய இன்பத்தைஅருகிலுள்ளார்பாற் பெறுகின்றானென்னும் குறிப்பைப் புலப்படுத்துவது.

    (மேற்கோளாட்சி) மு. அடங்கா ஒழுக்கத்தையுடைய தலைவன் மாட்டு மனன்அழிந்தோளை அடங்கக் காட்டுதற்கு ஏதுவான பொருட் பக்கத்தில்தோழிக்குக் கூற்று நிகழ்ந்தது (தொல். கற்பு. 9, இளம்.); தோழி இன்னாக்கிளவி கூறியதனை, இது பொழுது கூறிப் பயந்த தென்னெனத் தலைவிகாய்ந்து கூறியது (தொல். கற்பு. 6,ந.); தலைவியைப் பாங்கி கழறியது(நம்பி. 205.)

    ஒப்புமைப் பகுதி 1. இதுமற் றெவனோ தோழி: குறுந். 299:1.

    இன்னர்: “இன்ன னாவ தெவன்கொ லன்னாய்” (ஐங். 26:4);“இன்ன ரினைய ரெமர்பிற ரென்னுஞ் சொல்” (நாலடி. 205.)

    3. எருமைக் காரான்: குறுந். 261:3; நற். 80:1.

    3-4. எருமைக் குழவி: பட். 14; நற். 120:1-2, 271:1; ஐங். 92:1-2.

    6. கடம் பூணல்: சிலப். 15:2; மணி. 3:70.

    7. பெருமுது பெண்டிர்: முல்லைப். 11.

(181)
  
(தன் குறையைத் தோழி மறுத்தாளாக, “தலைவியும் இரங்கிக்குறைநயந்திலள்; தோழியும் உடம்படவில்லை; ஆதலின் இனி மடலேறுவேன்” என்பதுபடத் தலைவன் தன் நெஞ்சை நோக்கிக் கூறியது.)
  182.   
விழுத்தலைப் பெண்ணை விளையன் மாமடல் 
    
மணியணி பெருந்தார் மரபிற் பூட்டி 
    
வெள்ளென் பணிந்துபிற ரெள்ளத் தோன்றி 
    
ஒருநாண் மருங்கிற் பெருநா ணீக்கித் 
5
தெருவி னியலவுந் தருவது கொல்லோ 
    
கலிழ்ந்தவி ரசைநடைப் பேதை 
    
மெலிந்தில ணாம்விடற் கமைந்த தூதே. 

என்பது தோழியாற் குறைமறுக்கப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்குஉரைத்தது.

மடல் பாடிய மாதங்கீரன்.

    (பி-ம்.) 2. ‘மார்பிற்’; 5. ‘னியல்பு தருவது’; 6. ‘கலிங்கவிர், ‘கலிந்தவிர்,‘கலிழ்கவின்’; 7. ‘மெலிந்திலளாம்’.

    (ப-ரை.) நெஞ்சே, கலிழ்ந்து அவிர் அசை நடை பேதை-அழகு ஒழுகி விளங்கும் அசைந்த நடையையுடைய தலைவி,மெலிந்திலள் - நம்மாட்டு நெஞ்சம் நெகிழ்ந்திலள், நாம்