ஒளவையார். (பி-ம். அவ்வையார்.) (பி-ம்.) 7. ‘கானக’, ‘புன்புல வைப்பிற் கானத் தானே’
(ப-ரை.) தோழி-, புல் என் காயா பூ கெழு பெருசினை -மழை பெய்வதற்கு முன் பொலிவழிந்திருந்த காயாவினதுமலர்கள் பொருந்திய பெரிய கிளை, மெல் மயில் எருத்தின்தோன்றும் - மழை பெய்தபின் மெல்லிய மயிலினதுகழுத்தைப் போலத் தோற்றும், கானம் வைப்பின் புல்புலத்தான் - காட்டிடத்தையுடைய புல்லிய நிலத்தின்கண்,சென்ற நாட்ட - எம்மைப் பிரிந்து சென்று தங்கிய நாட்டிடத்துஉள்ளனவாகிய, கொன்றை அம் பசுவீ - கொன்றையின்அழகிய செவ்வி மலர்கள், நம் போல் பசக்கும் காலை -