பக்கம் எண் :


348


மணிமருள் பூவை யணிமல ரிடையிடைச், செம்புற மூதாய் பரத்தலின்”,“மணிமிடை பவளம் போல வணிமிகக் , காயாஞ் செம்மறாஅய்ப் பலவுடன், ஈயன் மூதா யீர்ம்புறம் வரிப்பப், புலனணி கொண்ட காரெதிர் காலை”, “காயா, அணிமிகு செம்ம லொளிப்பன மறையக், கார்கவின்கொண்ட காமர் காலை” (அகநா.134:1-4, 304:13-6, 374:13-5.)

    1-5. கொன்றையும் காயாவும்: பொருந. 201; முல்லைப். 93-4;நற். 242:3-4, 371:1; ஐங். 412:1, 420:1-2; பெருங். 1.49:115-6.

    5-6. . காயாஞ்சினை மயிலின் கழுத்திற்கு: “கருநனைக் காயாக் கணமயி லவிழ” (சிறுபாண். 165); ‘மயிலெருத் துறழணி - மயிலினதுகழுத்தை மாறுபடுகின்ற அணியப்பட்ட காயாம்பூவாற் செய்த கண்ணிகள்’ (கலி. 103:59,ந.); “விரவுப்பொறி மஞ்ஞை வெரீஇ யரவின், அணங்குடை யருந்தலை பைவிரிப் பவைபோற், காயா மென்சினை தோயநீடிப்,பஃறுடுப் பெடுத்த வலங்குகுலைக் காந்தள்” (அகநா. 108:12-5); “கருவுற்றகாயாக் கணமயிலென் றஞ்சி” (திணைமாலை. 107); “கலவமாமயிலெருத்திற் கடிமல ரவிழ்ந்தன காயா” (சீவக.1558.)

    7. புன்புலம்: குறுந். 202:2.

(183)
  
(தன்னை இடித்துரைத்த பாங்கனை நோக்கி, “சிற்றூரிடத்திற் செல்பவர் யாரும் தலைவியின் கண்வலையிற் படுவர்; என் நெஞ்சம் அதிற்பட்டது”என்று கூறியது.)
  184.   
அறிகரி பொய்த்த லான்றோர்க் கில்லை  
    
குறுக லோம்புமின் சிறுகுடிச் செலவே 
    
இதற்கிது மாண்ட தென்னா ததற்பட் 
    
டாண்டொழிந் தன்றே மாண்டகை நெஞ்சம் 
5
மயிற்க ணன்ன மாண்முடிப் பாவை  
    
நுண்வலைப் பரதவர் மடமகள் 
    
கண்வலைப் படூஉங் கான லானே. 

என்பது கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது.

ஆரிய வரசன் யாழ்ப் பிரமதத்தன்.

    (பி-ம்.) 3. ‘அதர்ப்பட்டு’; 4. ‘ஒழித்தன்றென்’. ‘தன்றே நாண்டகை’. ‘தன்றென் மாண்டகை’; 5. ‘மாமுடிப்’; 7. ‘காணலானே’.

    (ப-ரை.) மயில் கண் அன்ன - மயிலினது பீலிக்கண்ணைப் போன்ற, மாண்முடி பாவை - மாட்சிமைப்பட்ட முடியையுடைய பாவை போல்வாளாகிய, நுண்வலைபரதவர் மடமகள் - நுண்ணிய வலையையுடைய நெய்தனிலமாக்களுடைய மடமையையுடைய மகளது, கண் வலை படூஉம் கானலான் - கண்வலையின் கண் ஆண்டுச் செல்வார்