பக்கம் எண் :


356


    3. வாலிழை : குறுந். 45:2.

    இழை நெகிழ்த்தல் : (குறுந். 358:1); “விறலிழை நெகிழ்த்த வீவருங்கடுநோய்” (குறிஞ்சிப். 3); “இழைநெகிழ் பருவரல்”, “புனையிழைஞெகிழ்த்த புலம்புகொ ளவலமொடு” (நற். 70:9, 348:7); “இழைநெகிழ்செல்லல்”, “இழைநிலை நெகிழ”, ‘‘இழைநெகிழ் செல்லலுறீஇ”, “வில்லிழைநெகிழ” (ஐங். 25:4, 310:2, 315:3, 318:2); “பாசிழை ஞெகிழ”(பதிற். 68:15); “திருந்திழை நெகிழ்ந்தன”, “வீங்கிழை நெகிழச் சாஅய்”,“திருந்திழை நெகிழ்ந்து” (அகநா. 206:16, 251:3, 255:17,387:11.)

    3-4. தலைவர் வாரார், மாலை வந்தது : குறுந். 155: 3-7, ஒப்பு.

(188)
  
(வேந்தனது வினைமேற் செல்லாநின்ற தலைவன் தன் பாகனைநோக்கி, “இன்று விரைந்து சென்று வினைமுடித்து, நாளைத் தலைவிபால்மீண்டு வருவேமாக” என்று கூறியது.)
 189.   
இன்றே சென்று வருவது நாளைக் 
    
குன்றிழி யருவியின் வெண்டேர் முடுக 
    
இளம்பிறை யன்ன விளங்குசுடர் நேமி 
    
விசும்புவீழ் கொள்ளியிற் பைம்பயிர் துமிப்பக் 
5
காலியற் செலவின் மாலை யெய்திச் 
    
சின்னிரை வால்வளைக் குறுமகள் 
    
பன்மா ணாக மணந்துவக் குவமே. 

என்பது வினை தலைவைக்கப்பட்ட விடத்துத.் (பி-ம். பட்டிடத்துத்)தலைமகன் பாகற்கு உரைத்தது

    (தலை வைக்கப்பட்ட விடத்து - செய்ய வேண்டுமென்று சுமத்தப்பட்ட காலத்தில்.)

மதுரை ஈழத்துப் பூதன்றேவன்.

    (பி-ம்) 4. ‘விசும்பு வீசு’, ‘துமியக்’; 5. ‘காலையிற் செலீஇ ’; 7. ‘மடைந்துவக் கும்மே’, ‘மடைந்து சார்குதுமே’.

    (ப-ரை.) பாக, இன்றே சென்று - இன்றைக்கே வினையின் பொருட்டுப் புறப்பட்டுப் போய், நாளை வருவது -நாளை மீண்டு வருவேமாக. குன்று இழி அருவியின் - குன்றினின்று வீழும் அருவியைப் போல, வெள் தேர் முடுக -யானைத் தந்தத்தாற் செய்த வெள்ளிய தேர் விரைந்துசெல்ல, இள பிறை அன்ன - இளம்பிறையைப் போன்ற,விளங்கு சுடர் நேமி - விளங்குகின்ற ஒளியையுடையஅத்தேரினது சக்கரம், விசும்பு வீழ் கொள்ளியின் - வானத்தினின்றும், வீழ்கின்ற கொள்ளியைப் போல, பசு பயிர்துமிப்ப-பசிய பயிர்களைத் துணிப்ப, கால் இயல் செலவின் -