அரிசில் கிழார் (பி-ம். அரிசிற் கிழார், அழிசிற் கிழார்.) (பி-ம்.) 2. ‘இட்டுவர்ச்சுனையபகுவாய்த் தட்டைப்’; 5. ‘மன்னனெந்’,‘மன்னெந்’.
(ப-ரை.) தோழி, மட்டம் பெய்த - கள்ளைப் பெய்த,மணி கலத்து அன்ன - நீலக்குப்பிகளைப் போன்ற, இட்டுவாய் சுனைய - சிறிய வாயையுடைய சுனையின்கண்உள்ளனவாகிய, பகு வாய் தேரை - பிளந்த வாயையுடையதேரைகள், தட்டை பறையின் கறங்கும் நாடன் - கிளிகடிகருவியாகிய தட்டைப் பறையைப் போல ஒலிக்கும்நாட்டையுடைய தலைவன், தொல்லை திங்கள் நெடு வெள்நிலவின் - களவுக் காலமாகிய பழைய திங்களில் நெடியவெண்ணிலாவின்கண், நெடு தோள் - என் நீண்ட தோள்களை,மணந்தனன்- தழுவினான்; அதனால், இன்றும் - இக்காலத்தும், முல்லை முகை நாறும் - அவன் மேனியினது