தேரதரன (பி-ம். தோதான், தாமோதரன்.) (பி-ம்) 2. ‘தெழுதகு’, ‘தெழுதரும்’; 5. ‘தைஇயசைவளி’, ‘தைவசைவளி’, ‘மெய்பாயந்தூதா’, ‘மெய்பாய்ந்தூர்தர’; 6. ‘செய்புறு’, ‘செய்யறு’.
(ப-ரை.) தோழி -, தைவரல் அசை வளி - தடவுதலையுடைய அசைந்து வரும் காற்று, மெய் பாய்ந்துஉறுதர - உடம்பின் கண் பரந்து தீண்ட, அதனால், செய்வுஉறு பாவை அன்ன - அலங்காரம் செய்தலைப் பெற்றபாவையைப் போன்ற, என் மெய் - எனது மேனி, பிறிதுஆகுதல் அறியாதோர் - வேறுபாடுடையதாகுதலை அறியாதவராகிய தலைவர், வேண்டு வினை முடிநர் - தாம் விரும்பிச்சென்ற கருமத்தை முடித்துக் கொள்வாராய், சுடர் சினம்தணிந்து - கதிரவன் வெம்மை நீங்கி, குன்றம் சேர - அத்தகிரியை அடைய, படர் சுமந்து- நினைவு கூரும் துன்பத்தைமேற்கொண்டு, எழுதரு பையுள் மாலை - வாரா நிற்கும்துன்பத்தைத் தரும் மாலைக் காலத்தில், யாண்டு உளர்கொல் -எங்கே இருக்கின்றனரோ? அன்னோ - அந்தோ! இன்னாது -இம்மாலைக் காலம் துன்பத்தைத் தருவது, இரங்கும்-தலைவி வருந்துவாள், என்னார் - என்று நினையாராயினர்.
(முடிபு) என் மெய் பிறிதாகுதலை அறியாதோர், வேண்டுவினைமுடிநர் யாண்டுளர் கொல்? இரங்கு மென்னார்.
(கருத்து) என்னுடைய மெலிவையறிந்து தலைவர் இன்னும்மீண்டாரல்லர்.
(வி-ரை.) சினம்- வெயிலுமாம். சினந்தணிந்தமையைக் கூறினமையின் குன்றம் அத்தகிரியாயிற்று. படர்- தமியராயினார் படும் துன்பம்.