கார்காலத்தை ஏற்றுக் கொண்ட கிளைத்த மழையையுடைய,ஊதையம் குளிரொடு - ஊதைக் காற்றினது குளிர்ச்சியோடு,பேதுற்று மயங்கிய- மிக மயங்கிக் கலந்த, கூதிர் உருவின்கூற்றம் - கூதிர்க் காலமாகிய உருவத்தையுடைய கூற்றம்,காதலர் பிரிந்த என் குறித்து வரும் - தலைவரைப் பிரிந்திருக்கும்என்னைக் கொல்லுதல் குறித்து வாரா நின்றது; யாதுசெய்வாம்--!
(முடிபு) தோழி, கூதிர் உருவிற் கூற்றம் எற்குறித்து வரும்; யாதுசெய்வாம்?
(கருத்து) தலைவர் கூதிர்க் காலத்தும் வந்திலராதலின் இனி உயிர்வாழேன்.
(வி-ரை.) யாது - இத்துன்பத்தினின்றும் உய்வதற்குரிய முயற்சிகளுள் எதனை. கொல்: அசைநிலை. கருவி - தொகுதி; இந்நூல், 42-ஆம் செய்யுளின் விசேடவுரையைப் பார்க்க. மழைத்துளி வீசுதலும் ஊதைக் காற்றும் கூதிர்க்காலத்துக்குரியவை. ஊதை - வாடை. ஊதையங் குளிர்: அம், சாரியை. கூற்றமென்றாள் தன் உயிரை உடலினின்றும் கூறுபடுத்து வதற்கேதுவாதலின். எற்குறித்து - என்னைக் கொல்லுதல் குறித்து. ஏகாரம்: ஈற்றசை.
ஒப்புமைப் பகுதி மு. அகநா. 364:12.
4. கூதிர் உருவிற் கூற்றம் : “வாடையாய்க் கூற்றி னாருமுருவினைமாற்றி வந்தார்” (கம்ப. கார்காலப். 60); சீகாளத்திப். பொன்முகரி. 41.
5. எற்குறித்து வரும்: குறுந். 188:4, 216:7.
(197)
(“இனி யாங்கள் தினைப்புனங் காக்கச் செல்கின்றேம்; நீ ஆண்டேவருக. ஈண்டு எம்முடைய தாய் வருவாளாதலின் வாரற்க” என்று தோழிதலைவனுக்குக் கூறியது.) 198. | யாஅங் கொன்ற மரஞ்சுட் டியவிற் |
| கரும்புமருண் முதல பைந்தாட் செந்தினை |
| மடப்பிடித் தடக்கை யன்ன பால்வார்பு |
| கரிக்குறட் டிறைஞ்சிய செறிகோட் பைங்குரற் |
5 | படுகிளி கடிகஞ் சேறு மடுபோர் |
| எஃகுவிளங்கு தடக்கை மலையன் கானத் |
| தார நாறு மார்பினை |
| வாரற்க தில்ல வருகுவள் யாயே. |
என்பது தோழி குறியிடம் பெயர்த்துக் கூறியது.
(குறியிடம் - இரவுக்குறி யிடத்தை. பெயர்த்து - மாற்றி.)