பக்கம் எண் :


373


கார்காலத்தை ஏற்றுக் கொண்ட கிளைத்த மழையையுடைய,ஊதையம் குளிரொடு - ஊதைக் காற்றினது குளிர்ச்சியோடு,பேதுற்று மயங்கிய- மிக மயங்கிக் கலந்த, கூதிர் உருவின்கூற்றம் - கூதிர்க் காலமாகிய உருவத்தையுடைய கூற்றம்,காதலர் பிரிந்த என் குறித்து வரும் - தலைவரைப் பிரிந்திருக்கும்என்னைக் கொல்லுதல் குறித்து வாரா நின்றது; யாதுசெய்வாம்--!

    (முடிபு) தோழி, கூதிர் உருவிற் கூற்றம் எற்குறித்து வரும்; யாதுசெய்வாம்?

    (கருத்து) தலைவர் கூதிர்க் காலத்தும் வந்திலராதலின் இனி உயிர்வாழேன்.

    (வி-ரை.) யாது - இத்துன்பத்தினின்றும் உய்வதற்குரிய முயற்சிகளுள் எதனை. கொல்: அசைநிலை. கருவி - தொகுதி; இந்நூல், 42-ஆம் செய்யுளின் விசேடவுரையைப் பார்க்க. மழைத்துளி வீசுதலும் ஊதைக் காற்றும் கூதிர்க்காலத்துக்குரியவை. ஊதை - வாடை. ஊதையங் குளிர்: அம், சாரியை. கூற்றமென்றாள் தன் உயிரை உடலினின்றும் கூறுபடுத்து வதற்கேதுவாதலின். எற்குறித்து - என்னைக் கொல்லுதல் குறித்து. ஏகாரம்: ஈற்றசை.

    ஒப்புமைப் பகுதி மு. அகநா. 364:12.

    4. கூதிர் உருவிற் கூற்றம் : “வாடையாய்க் கூற்றி னாருமுருவினைமாற்றி வந்தார்” (கம்ப. கார்காலப். 60); சீகாளத்திப். பொன்முகரி. 41.

    5. எற்குறித்து வரும்: குறுந். 188:4, 216:7.

(197)
  
(“இனி யாங்கள் தினைப்புனங் காக்கச் செல்கின்றேம்; நீ ஆண்டேவருக. ஈண்டு எம்முடைய தாய் வருவாளாதலின் வாரற்க” என்று தோழிதலைவனுக்குக் கூறியது.)
 198.    
யாஅங் கொன்ற மரஞ்சுட் டியவிற் 
    
கரும்புமருண் முதல பைந்தாட் செந்தினை 
    
மடப்பிடித் தடக்கை யன்ன பால்வார்பு 
    
கரிக்குறட் டிறைஞ்சிய செறிகோட் பைங்குரற் 
5
படுகிளி கடிகஞ் சேறு மடுபோர் 
    
எஃகுவிளங்கு தடக்கை மலையன் கானத் 
    
தார நாறு மார்பினை 
    
வாரற்க தில்ல வருகுவள் யாயே. 

என்பது தோழி குறியிடம் பெயர்த்துக் கூறியது.

    (குறியிடம் - இரவுக்குறி யிடத்தை. பெயர்த்து - மாற்றி.)

கபிலர்.