பக்கம் எண் :


376


    7. தலைவன் சந்தனம் பூசி வருதல்: குறுந்.150:3, ஒப்பு.

    8. வாரற்க தில்ல: குறுந். 360:4; அகநா. 40:12.

    மு. குறுந். 141.

(198)
  
(தாய் முதலியோர் தலைவியை வீட்டிற்கு அழைத்துச் செல்லஎண்ணியிருப்பதைத் தோழியால் அறிந்த தலைவன், “இனி இவளைப்பெறுவது அரிது போலும்! ஆயினும் என் காமநோய் என்றும் அழியாதது;பிறவிதோறும் தொடர்ந்து வருவது” என்று நெஞ்சை நோக்கிக் கூறியது.)
 199.    
பெறுவ தியையா தாயினு முறுவதொன் 
    
றுண்டுமன் வாழிய நெஞ்சே திண்டேர்க் 
    
கைவள் ளோரி கானந் தீண்டி 
    
எறிவளி கமழு நெறிபடு கூந்தல் 
5
மையீ ரோதி மாஅ யோள்வயின் 
    
இன்றை யன்ன நட்பி னிந்நோய் 
    
இறுமுறை யெனவொன் றின்றி 
    
மறுமை யுலகத்து மன்னுதல் பெறுமே. 

என்பது தோழி செறிப்பறிவுறுப்ப, நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது.

பரணர்

    (பி-ம்.) 3. ‘கைவளரோரி’; 8. ‘பெறினே’.

    (ப-ரை.) நெஞ்சே-, திண் தேர் - திண்ணிய தேரையுடைய, கைவள் ஓரி - கைவண்மையையுடைய ஓரியினது,கானம் தீண்டி - கானத்தைத் தீண்டி, எறி வளி - வீசுகின்றகாற்றைப் போல, கமழும் - மணக்கின்ற, நெறிபடு கூந்தல் -நெறிப்பு அமைந்த கூந்தலாகிய, மை ஈர் ஓதி - மையைப்போன்ற தண்ணிய மயிரையுடைய, மாயோள்வயின் -மாமையை உடையோளிடத்து, இன்றை அன்ன நட்பின்இ நோய் - இன்றை நிலையைப் போன்று என்றும் உள்ளநட்பையுடைய இந்தக் காமநோயானது, இறுமுறை எனஒன்று இன்றி - அழியுமுறை என்பது ஒன்று இல்லாமல்,மறுமை உலகத்தும் - மறுமையில் வாழ்தற்குரிய உலகத்திலும், மன்னுதல் பெறும் - நிலைபேற்றை அடையும்; ஆதலின், பெறுவது இயையாது ஆயினும் - தலைவியை இப்பிறவியின்கண் பெறுதல் நம்மாட்டுப் பொருந்தாதாயினும்,உறுவது ஒன்று உண்டு - மறுமை யுலகத்துப் பெறுவதாகியநாம் அடையும் பயன் ஒன்று உண்டு.