பரணர் (பி-ம்.) 3. ‘கைவளரோரி’; 8. ‘பெறினே’.
(ப-ரை.) நெஞ்சே-, திண் தேர் - திண்ணிய தேரையுடைய, கைவள் ஓரி - கைவண்மையையுடைய ஓரியினது,கானம் தீண்டி - கானத்தைத் தீண்டி, எறி வளி - வீசுகின்றகாற்றைப் போல, கமழும் - மணக்கின்ற, நெறிபடு கூந்தல் -நெறிப்பு அமைந்த கூந்தலாகிய, மை ஈர் ஓதி - மையைப்போன்ற தண்ணிய மயிரையுடைய, மாயோள்வயின் -மாமையை உடையோளிடத்து, இன்றை அன்ன நட்பின்இ நோய் - இன்றை நிலையைப் போன்று என்றும் உள்ளநட்பையுடைய இந்தக் காமநோயானது, இறுமுறை எனஒன்று இன்றி - அழியுமுறை என்பது ஒன்று இல்லாமல்,மறுமை உலகத்தும் - மறுமையில் வாழ்தற்குரிய உலகத்திலும், மன்னுதல் பெறும் - நிலைபேற்றை அடையும்; ஆதலின், பெறுவது இயையாது ஆயினும் - தலைவியை இப்பிறவியின்கண் பெறுதல் நம்மாட்டுப் பொருந்தாதாயினும்,உறுவது ஒன்று உண்டு - மறுமை யுலகத்துப் பெறுவதாகியநாம் அடையும் பயன் ஒன்று உண்டு.