பக்கம் எண் :


377


    (முடிபு) நெஞ்சே, இந்நோய் மறுமையுலகத்தும் மன்னுதல் பெறும்;பெறுவது இயையாதாயினும் உறுவதொன்றுண்டு.

    (கருத்து) இனி இம்மையில் தலைவியைக் காணப்பெறேன்.

    (வி-ரை.) மன், வாழிய: அசைநிலைகள். ஓரி - ஒரு வள்ளல். இந்தநட்பு என்றும் குன்றாது பிறவிதோறும் தொடர்ந்து வருவதென்றான்.மறுமை- மறுபிறவி.

    மேற்கோளாட்சி மு. தோழி இற்செறிப்பு அறிவுறுப்பத் தலைவன் ஆற்றானாய்க் கூறியது (தொல். களவு. 12,ந.); தலைமகன் தஞ்சம் பெறாதுநெஞ்சோடு கிளந்தது (நம்பி. 154.)

    ஒப்புமைப் பகுதி 2. வாழிய நெஞ்சே: குறுந்.19.3, ஒப்பு.

    3. கைவள்ளோரி: “மழவர் பெருமகன் மாவள் ளோரி, கைவளம்”(நற். 52:9-10); “ஓரி விசும்பிற், கருவி வானம் போல, வரையாதுசுரக்கும் வள்ளியோய்” (புறநா.204:12-4.)

    4. நெறிபடு கூந்தல்: குறுந். 116:4, 190: 1.

    3-4. ‘‘வல்வில் லோரி கான நாறி, இரும்பல் லொலிவருங் கூந்தல்”(நற்.6:8-9.)

    5. மையீரோதி: “மையிருங் கூந்தல்” (குறுந். 209:7); “மையுக்கன்ன மொய்யிருங் கூந்தல்” (மதுரைக். 417.)

    மாயோள்: குறுந்.9:1,ஒப்பு.

    6. இன்றையன்ன நட்பு: குறுந். 385:6, ஒப்பு.

    6-8. நட்பு மறுபிறப்பிலும் மன்னுதல்: (குறுந். 2:3, ஒப்பு, 49:3-5, ஒப்பு.); “ஏனை யுலகத்து மியைவதா னமக்கென” (குறிஞ்சிப். 24.)

(199)
  
(பருவம் வந்தகாலத்துக் கவன்ற தலைவியை நோக்கி, “இது காரன்று; வம்பு” எனக்கூறிய தோழிக்கு, “கார்ப்பருவத்துக்குரிய மேகமுழக்கமும் புதுவெள்ளமும் உள்ளன; இக்காலத்தும் தலைவர் வந்திலர்; அவர் நம்மை மறந்தார் போலும்!” என்று தலைவி கூறி வருந்தியது.)
 200.    
பெய்த குன்றத்துப் பூநாறு தண்கலுழ்  
    
மீமிசைத் தாஅய வீஇ சுமந்துவந்  
    
திழிதரும் புனலும் வாரார் தோழி  
    
மறந்தோர் மன்ற மறவா நாமே  
5
கால மாரி மாலை மாமழை  
    
இன்னிசை யுருமின முரலும்  
    
முன்வர லேமஞ் செய்தகன் றோரே.  

என்பது பருவ வரவின்கண் ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி,“பருவமன்று; வம்பு” என்றவழித் தலைமகள் சொல்லியது.