(ஆசிரியர் பெயர் காணப்படவில்லை.) (பி-ம்.) 1. ‘அமிர்த’, ‘அமுத’, ‘மயிலியலாட்டி’; 4. ‘மாந்தியல்லது’;‘மூங்கிலிற்’; 6. ‘ஓங்கிய சாரல்’.
(ப-ரை.) தோழி-, அயல் இல் ஆட்டி - அயன்மனைக்கிழத்தி, பால் கலப்பு அன்ன - பாலைக் கலந்தாற்போன்றஇனிமையையுடைய, தேக்கொக்கு அருந்துபு - தேமாம்பழத்தைத் தின்று, நீலம் மெல்சிறை - கரிய மெல்லியசிறகுகளையும், வள் உகிர் பறவை - கூரிய நகங்களையும்உடைய வௌவால், நெல்லியம் புளி மாந்தி- நெல்லியினதுபுளித்த காயை உண்டு, அயலது - அயலிலுள்ளதாகிய,முள் இல் அம் பணை மூங்கில் தூங்கும் - முள்ளில்லாதஅழகிய பருத்த மூங்கிலின் கண்ணே தொங்குகின்ற, கழைநிவந்து ஓங்கிய சோலை - மூங்கிற் கோல்கள் உயர்ந்துவளர்ந்த சோலைகளையுடைய, மலைகெழு நாடனை -மலைகள் பொருந்திய நாட்டையுடைய தலைவனை,வருமென்றோள்- வரைவுக்குரியவற்றோடு வருவானென்றுகூறினாள்; ஆதலின், அமிழ்தம் உண்க - அவள் அமிழ்தத்தைஉண்பாளாக!
(முடிபு) அயலிலாட்டி நாடனை வருமென்றோள்; அமிழ்தம் உண்க!