பக்கம் எண் :


379


(தலைவனும் தலைவியும் மணந்துகொண்டு இல்லறம் நடத்தும்மனைக்கண் சென்ற தோழி, “வரைந்துகொள்ளும் வரையில் நீ வேறுபடாமல் எங்ஙனம் ஆற்றியிருந்தாய்” என்று கூற, “நான் அங்ஙனம் ஆற்றியிருக்கும் வண்ணம் அயன்மனைக் கிழத்தி முன்பு தலைவன் வரவைக் கூறினாள்; அவள் வாழ்க!” என்று தலைவி சொல்லியது.)
 201.    
அமிழ்த முண்கநம் மயலி லாட்டி 
    
பால்கலப் பன்ன தேக்கொக் கருந்துபு 
    
நீல மென்சிறை வள்ளுகிர்ப் பறவை 
    
நெல்லி யம்புளி மாந்தி யயலது 
5
முள்ளி லம்பணை மூங்கிற் றூங்கும் 
    
கழைநிவந் தோங்கிய சோலை 
    
மலைகெழு நாடனை வருமென் றோளே. 

என்பது கடிநகர் வேறுபடாது நன்கு ஆற்றினாயென்ற தோழிக்குக்கிழத்தி உரைத்தது.

     (கடிநகர் - காவலமைந்த வீட்டில்; மணம் செய்துகொண்டு இல்லறம்நடத்தும் மனையிலெனலும் ஆம்.)

(ஆசிரியர் பெயர் காணப்படவில்லை.)

    (பி-ம்.) 1. ‘அமிர்த’, ‘அமுத’, ‘மயிலியலாட்டி’; 4. ‘மாந்தியல்லது’;‘மூங்கிலிற்’; 6. ‘ஓங்கிய சாரல்’.

    (ப-ரை.) தோழி-, அயல் இல் ஆட்டி - அயன்மனைக்கிழத்தி, பால் கலப்பு அன்ன - பாலைக் கலந்தாற்போன்றஇனிமையையுடைய, தேக்கொக்கு அருந்துபு - தேமாம்பழத்தைத் தின்று, நீலம் மெல்சிறை - கரிய மெல்லியசிறகுகளையும், வள் உகிர் பறவை - கூரிய நகங்களையும்உடைய வௌவால், நெல்லியம் புளி மாந்தி- நெல்லியினதுபுளித்த காயை உண்டு, அயலது - அயலிலுள்ளதாகிய,முள் இல் அம் பணை மூங்கில் தூங்கும் - முள்ளில்லாதஅழகிய பருத்த மூங்கிலின் கண்ணே தொங்குகின்ற, கழைநிவந்து ஓங்கிய சோலை - மூங்கிற் கோல்கள் உயர்ந்துவளர்ந்த சோலைகளையுடைய, மலைகெழு நாடனை -மலைகள் பொருந்திய நாட்டையுடைய தலைவனை,வருமென்றோள்- வரைவுக்குரியவற்றோடு வருவானென்றுகூறினாள்; ஆதலின், அமிழ்தம் உண்க - அவள் அமிழ்தத்தைஉண்பாளாக!

    (முடிபு) அயலிலாட்டி நாடனை வருமென்றோள்; அமிழ்தம் உண்க!