(கருத்து) தலைவன் வரைவொடு வருதலை முன்பு கூறி எனக்குஉறுதி யுண்டாக்கிய அயலிலாட்டி வாழ்வாளாக!
(வி-ரை.) அமிழ்தமுண்கவென்றது சுவர்க்க போகத்தைப் பெறுகவென்றபடி. இங்ஙனம் வாழ்த்தும் மரபை இந்நூல் 83-ஆம் செய்யுளாலும்உணரலாகும்.
தலைவி, புறம்போந்து செய்தியறிதற்கியலாத பெருங்காப்பினளாகஇருந்தமையின், தலைவன் வரைவொடு புகுதலைத் தான் அறியாதுஅயலிலாட்டி கூற அறிந்தாள்.
நெல்லியம் புளியென்றது நெல்லிக்காயையே; அம்: சாரியை.தேமாங்கனியை அருந்தித் தெவிட்டினமையின் வேற்றுச் சுவையையுடையநெல்லியம்புளியை வௌவால்கள் உண்டன.
தலைவன் வரைவுடன் வருதலை அயலிலாட்டி முன்பு கூறினமையின் ஆற்றியிருந்தேனென்று தலைவி காரணத்தைப் புலப்படுத்தினாளாயிற்று.
தேமாம்பழத்தை உண்ட வௌவால் பின்பு மாறுபட்ட சுவையையுடைய நெல்லிக்காயை உண்டு சிறிதும் ஊறு உண்டாக்காத முள்ளில்மூங்கிலிற் றூங்கியதுபோல, களவுப் புணர்ச்சியின்கண் இன்பந் துய்த்ததலைவன் அவ்வின்பத்துக்கு மாறாகிய இடையீடுகளையும் ஏற்றுப் பின்வரைந்து கொண்டு சிறிதும் ஏதமின்றி இன்பம் துய்க்கும் நிலையினனாயினனென்பது குறிப்பு.
மேற்கோளாட்சி 1. அகரத்தோடு கூடிய தகரவீறு வியங்கோளில் வாழ்த்துதற்பொருண்மைக்கண் வந்தது (நன். 337, மயிலை; இ.வி. 239.)
ஒப்புமைப் பகுதி 1. அயலிலாட்டி: அகநா. 386:11.
1. மு. நற். 65:1.2. தேக்கொக்கு: குறுந். 26:6, ஒப்பு.
4. நெல்லியம்புளி: “தீம்புளி நெல்லி” (குறுந். 317:2); “பராரைநெல்லி யம்புளித் திரள்காய்” (அகநா. 69:7.)
2-4. வௌவால், மா, நெல்லி: “உள்ளூர் மாஅத்த முள்ளெயிற்றுவாவல், ஓங்க லஞ்சினைத் தூங்குதுயில் பொழுதின், வெல்போர்ச் சோழரழிசியம் பெருங்காட்டு, நெல்லியம் புளிச்சுவைக் கனவி யாஅங்கு”(நற். 87:1-4.)
7. குறுந். 83:5.
6-7. சோலை மலைகெழு நாடன்: “பிறங்கிருஞ் சோலை நன்மலைநாடன்” (கலி. 42:4.) மு. குறுந். 38, 389; நற். 65.
(201)
(பரத்தையிற் பிரிந்துவந்த தலைவனுக்குத் தூதாகவந்த தோழியைநோக்கி, “தலைவர் இப்பொழுது எனக்கு இன்னாமையைத் தரும்ஒழுக்கத்தினராதலின் என் நெஞ்சு வருந்தும்; அவரை ஏற்றுக் கொள்ளேன்” என்று தலைவி கூறியது.)