நெடும்பல்லியத்தன் (பி-ம். நெடும்பல்லியத்தை.) (பி-ம்.) 3. ‘யிருந்து’; 4. ‘கடவுணணிய’; 5. ‘வெரீஇயினொழுகு’, ‘ஒரீஇயின னொழுகு’, ‘வெரீஇயின னொழுகு’; 6. ‘பரியலெமன்’, ‘யாம்’.
(ப-ரை.) தோழி, மலை இடை இட்ட நாட்டரும் அல்லர் -தலைவர் மலைகள் இடையிடுவதனாற் சேயதாகிய நாட்டினருமல்லர்; மரந்தலை தோன்றா ஊரரும் அல்லர் - தன்னிடத்துள்ளமரங்கள் நமக்குத் தோன்றாத சேய்மையிலுள்ள ஊரினரும்அல்லர்; கண்ணின் காண - கண்ணாலே காணும்படி, நண்ணுவழி இருந்தும் - விரைவில் வருதற்குரிய அணிமையிடத்திலிருந்தும், கடவுள் நண்ணிய பாலோர் போல - முனிவரைஅணுகி வாழும் பகுதியினரைப்போல, ஒரீஇ ஒழுகும்என்னைக்கு - மனத்தால் நீங்கி ஒழுகுகின்ற என் தலைவர்பொருட்டு, யான்--, பண்டு ஒருகால்-முன்பு ஒரு சமயத்தில்,பரியலென் - பரிதலையுடை யேனாயினேன்; மன்-அஃதுஇப்பொழுது கழிந்ததே!
(முடிபு) நாட்டரு மல்லர்; ஊரரும் அல்லர்; நண்ணுவழியிருந்தும்ஒரீஇயொழுகும் என்னைக்குப் பண்டொருகால் யான் பரியலென்மன்.
(கருத்து)இப்பொழுது என்னைப் புறக்கணித் தொழுகும்தலைவர்பால் யான் முன்பு பரிவுடையளாக இருந்தேன்.
(வி-ரை.) மலையிடை யிட்ட நாட்டரென்றது வேற்று நாட்டாரென்றபடி; மரந்தலை தோன்றா ஊரரென்றது காடிடையிட்ட வேற்றூரா