உறையன். (பி-ம்.) 1. ‘செப்பினெஞ்’, ‘செப்பிநாம்’, ‘சொலினே’; 3. ‘புலம்புகொண்டவ்விளி’; 5. ‘கல்வரைபலாது’, ‘தோல்வழங்கு’, ‘தேர்வழங்கு’,‘பேஎர்பட்ட தொல் வழங்கு’.
(ப-ரை.) செப்பினம் செலின் - நம்முடைய செலவைத்தலைவியினிடத்துச் சொல்லிச் செல்வேமாயின், செலவு அரிதுஆகும் - செல்லுதல் அரிதாகும், என்று - என்று கூறி,அத்தம்ஓமை - பாலைநிலத்திலுள்ள ஓமைமரத்தினது, அம்கவட்டு இருந்த - அழகிய கிளையின்கண் இருந்த, இனம்தீர் பருந்தின் - இனத்தினின்றும் பிரிந்து வந்த பருந்தினது,புலம்பு கொள் தெள்விளி - தனிமையைப் புலப்படுத்தலைக்