பக்கம் எண் :


392


கூறியது; ஆதலின், இதனுள் பொருகளிறு என்றமையால், தலைமகள்தமர் தலைமகன் வரைவிற்கு உடன்படுவாரும் மறுப்பாருமாகி மாறுபட்டனரென்பது தோற்றுகின்றது. பொருகளிறு மிதித்த வேங்கை யென்றதனால்,பொருகின்ற இரண்டு களிற்றினும் மிதிப்பது ஒன்றாகலின் வரைவுடன்படாதார் தலைமகனை அவமதித்தவாறு காட்டிற்று. வேங்கை நின்றுகொய்ய மலருமென்றதனான், முன்பு ஏறிப் பறித்தல் வேண்டுவதுஇப்பொழுது நின்று பறிக்கலாயிற்று என்னும் பொருள் பட்டது; இதனானேபண்டு நமக்கு அரியனான தலைமகன் தன்னை அவமதிக்கவும் நமக்குஎளியனாகி அருள் செய்கின்றானெனப் பொருள்படக் கிடந்தவாறு காண்க’ (தொல். பொருள்.34, இளம்.); மிதியுண்டு வீழ்ந்த வேங்கை குறையுயிரோடு மலர்ந்தாற்போல யானும் உளேனாயினே னென்றமையின் மெய்யுவமப் போலியாயிற்று (தொல். உவம. 25, பேர்.); உள்ளுறையுவமம் தெய்வம் ஒழிந்த கருப்பொருளை நிலமாகக் கொள்ளும்; ‘இக் குறுந்தொகை, பிறிதொன்றன் பொருட்டுப் பொருகின்ற யானையால் மிதிப்புண்ட வேங்கை நசையற வுணங்காது மலர் கொய்வார்க்கு எளிதாகி நின்று பூக்கும் நாடனென்றதனானே, தலைவன் நுகருங் காரணத்தானன்றி வந்து எதிர்ப்பட்டுப் புணர்ந்து நீங்குவான் எம்மை இறந்துபாடு செய்வியாது ஆற்றுவித்துப் போயினானெனவும், அதனானே நாமும் உயிர் தாங்கியிருந்து பலரானும் அலைப்புண்ணா நின்றனம் வேங்கை மரம் போலெனவும் உள்ளத்தான் உவமங் கொள்ள வைத்தவாறு காண்க’ (தொல். அகத். 47, ந.); உள்ளுறை யுவமம் வந்தது(கலி. 38, ந.)

    ஒப்புமைப் பகுதி 2. களிறு மிதித்த வேங்கைமரம்: “மழகளி றுரிஞ்சியபராரை வேங்கை” (நற். 362:7); “புலிக்கேழ் வேங்கைப் பூஞ்சினைபுலம்ப, முதல்பாய்ந் திட்ட முழுவலி யொருத்தல்’’ (அகநா. 227: 8-9.)

    2-3. வேங்கை மலரை மகளிர் அணிந்து கொள்ளுதல்: “தலைநாட்பூத்த பொன்னிணர் வேங்கை, மலைமா ரிடூஉ மேமப் பூசல்”(மலைபடு. 305-6); ‘கருங்கால் வேங்கை நாளுறு புதுப்பூப், பொன்செய்கம்மியன் கைவினை கடுப்பத், தகைவனப் புற்ற கண்ணழி கட்டழித்,தொலிபல் கூந்த லணிபெறப் புனைஇ” (நற். 313:1-4); “அகலறைமலர்ந்த வரும்புமுதிர் வேங்கை ஒள்ளிலைத் தொடலை தைஇ”, ‘‘மலிதொட ரடைச்சிப், பொலிந்த வாயமொடு காண்டக வியலி”, “கருங்கால் வேங்கைச் செம்பூம் பிணையல், .. யாமணிந் துவக்கும்”, “பொரியரை வேங்கைத், தண்கமழ் புதுமலர் நாறும், அஞ்சி லோதி”, ”வதுவை மகளிர் கூந்தல் கமழ்கொள, வங்கூழாட்டிய வங்குழை வேங்கை” (அகநா. 105:1-2, 188:8-10, 345:8-9, 365:13-5, 378:2-3.)

    2-4. வேங்கைப் பூவை மகளிர் கொய்தல்: குறுந். 26:1-3;மதுரைக். 296-7; ஐங். 297: 1-2, 311:1; அகநா.48;6; 52:2-4.

(208)
  
(பொருள்வயிற் சென்ற தலைவன் அப்பொருளைப் பெற்று மீண்டுவந்து தோழியை நோக்கி, “நான் பிரிந்த விடத்து வேறொன்றையும்நினையாமல் தலைவியின் கூட்டத்தையே நினைந்திருந்தேன்” என்றுகூறும் வாயிலாகத் தனது அன்பைத் தலைவிக்குப் புலப்படுத்தியது.)