பக்கம் எண் :


398


     ஒப்புமைப் பகுதி 1. அஞ்சிலோதி: குறுந். 214:3, 280:2; குறிஞ்சிப். 180;நற். 105:10, 324:8, 355:8, 370:7; ஐங். 49:1, 391:6, 448:5; அகநா. 261:3;சீவக. 2576.

    2. வளை நெகிழ்தல்: குறுந். 11:1, ஒப்பு.

    4-5. மராம் வேனிலில் மலர்தல்: குறுந். 22:3-4, ஒப்பு; ஐங். 348.

    7. நீரில் வைப்பிற் சுரம்: “நீரி லத்தத் தாரிடை”, “நீரிலாராற்றுநிவப்பன” (அகநா. 17:12, 45:4.)

(211)
  
(தலைவனது குறையைத் தலைவி நயக்கும்படி, “தலைவனது தேர்வந்து வறிதே பெயர்வதாயிற்று; அவன் விருப்பம் கழிந்தது. அது கருதிவருந்துகின்றேன்” என்று தோழி கூறியது.)
     212.    
கொண்க னூர்ந்த கொடுஞ்சி நெடுந்தேர் 
    
தெண்கட லடைகரைத் தெளிமணி யொலிப்பக் 
    
காண வந்து நாணப் பெயரும் 
    
அளிதோ தானே காமம் 
5
விளிவது மன்ற நோகோ யானே. 

என்பது குறைநேர்ந்த தோழி குறைநயப்பக் கூறியது.

    (குறை நேர்ந்த - தலைவனது குறையை நிறைவேற்று வதற்குஉடம்பட்ட, குறை நயப்ப - தலைவனது குறையைத் தீர்த்தலைத்தலைவி நயக்கும் வண்ணம்.)

நெய்தற் கார்க்கியன்.

    (பி-ம்.) 1. ‘கொடிஞ்சி’, ‘கொடுஞ்சினை’; 2. ‘தெளிர்மணி’; 3. ‘கானல்வந்து’.

    (ப-ரை.) கொண்கன் ஊர்ந்த - தலைவன் ஏறிச் சென்ற,கொடுஞ்சி நெடு தேர் - கொடுஞ்சியை உடைய உயர்ந்ததேரானது, தெள் கடல் அடை கரை - தெள்ளிய நீரைஉடைய கடலை அடைந்த கரைக்கண், தெளி மணி ஒலிப்ப - தெளிந்த ஓசையை உடைய மணிகள் ஒலிக்கும்படி, காண வந்து நாண - நாம் காணும்படி வந்து பின்பு நாம் நாணும்படி,பெயரும் - மீண்டு செல்லா நிற்கும்; காமம்--, அளிது -இரங்கத் தக்கது; மன்ற விளிவது - நிச்சயமாக அழியக்கடவதாகும்; யான் நோகு - இவை கருதி யான் வருந்துவேன்.

    (முடிபு) கொண்கன் ஊர்ந்த தேர் வந்து பெயரும்; காமம் அளிது;அது விளிவது; யான் நோகு.

    (கருத்து) தலைவன் குறை பெறாமல் வருந்திச் சென்றான்.