நெய்தற் கார்க்கியன். (பி-ம்.) 1. ‘கொடிஞ்சி’, ‘கொடுஞ்சினை’; 2. ‘தெளிர்மணி’; 3. ‘கானல்வந்து’.
(ப-ரை.) கொண்கன் ஊர்ந்த - தலைவன் ஏறிச் சென்ற,கொடுஞ்சி நெடு தேர் - கொடுஞ்சியை உடைய உயர்ந்ததேரானது, தெள் கடல் அடை கரை - தெள்ளிய நீரைஉடைய கடலை அடைந்த கரைக்கண், தெளி மணி ஒலிப்ப - தெளிந்த ஓசையை உடைய மணிகள் ஒலிக்கும்படி, காண வந்து நாண - நாம் காணும்படி வந்து பின்பு நாம் நாணும்படி,பெயரும் - மீண்டு செல்லா நிற்கும்; காமம்--, அளிது -இரங்கத் தக்கது; மன்ற விளிவது - நிச்சயமாக அழியக்கடவதாகும்; யான் நோகு - இவை கருதி யான் வருந்துவேன்.
(முடிபு) கொண்கன் ஊர்ந்த தேர் வந்து பெயரும்; காமம் அளிது;அது விளிவது; யான் நோகு.
(கருத்து) தலைவன் குறை பெறாமல் வருந்திச் சென்றான்.