பக்கம் எண் :


399


    (வி-ரை.) கொண்கன் - நெய்தல் நிலத் தலைவன் (குறுந். 230:1,299:4); தமிழ் நெறி விளக்கம், 8-ஆம் சூத்திரம் பாரக்க.

    கொடுஞ்சி - தாமரை மொட்டின் வடிவமாகச் செய்து தேர்முன்நடப்படுவது; தேரூரும் தலைவர் இதனைக் கையால் பற்றிக் கொள்வதுவழக்கம்; “மணித்தேர்க் கொடுஞ்சி கையாற் பற்றி” (மணி. 4:48.) தம்பால்நயந்து வந்தோரது குறையைப் போக்குதல் அறநெறியாளர் கடனாதலின்,அதனைச் செய்யாமையால் வறிதே தலைவன் மீண்டது நாணத்தைத்தருவதாயிற்று; “இன்னா திரக்கப் படுத லிரந்தவர், இன்முகங் காணுமளவு” (குறள், 224); “இன்மை யுரைத்தார்க் கதுநிறைக்க லாற்றாக்கால்,தன்மெய் துறப்பான் மலை” (கலி. 43:26-7) என்பவற்றை ஓர்க.

    ‘நாம் காண வந்தானாயினும் நீ கண்டு குறைநயந்தா யில்லை’என்பது குறிப்பு. காமம் - தலைவனது காமம். தலைவன் நிலைக்குஇரங்கி, ‘யான் வருந்துவேன்” என்றாள். தலைவிக்கும் இரக்கம் உண்டாகிக் குறை நயத்தற் பொருட்டு.

    ஓகாரங்கள், ஏகாரங்கள், தான்: அசை நிலைகள்.

    கருப் பொருளால் இப்பாட்டு நெய்தற்குரியதாயிற்று; இங்ஙனமேநெய்தல் திணைக்குரிய பல செய்யுட்களைப் பாடிய காரணத்தால் இச்செய்யுளை இயற்றிய நல்லிசைப் புலவர், நெய்தல் கார்க்கியன் என்னும்சிறப்புப் பெற்றார் போலும்.

    ஒப்புமைப் பகுதி 1. கொண்கன்: குறுந். 229:4, 230:1. கொடுஞ்சி நெடுந்தேர்: குறுந். 345:1; பொருந. 163; பெரும்பாண். 416: மதுரைக். 752.

    1-3. தேர்மணி ஒலிப்பத் தலைவன் வருதல்: குறுந். 336: 3-4.

    4. அளிதோதானே: குறுந். 149:1, 395:7; புறநா. 109:2, 111:1.

    5. நோகோ யானே: குறுந். 131:6, ஒப்பு.

(212)
  
(தலைவனைப் பிரிந்த காலத்து, “நம்பாலுள்ள விருப்பத்தினால்தலைவர் தாம் சென்ற வினையை நிறைவேற்றாமல் வந்து விடுவாரோ?”என்று ஐயுற்ற தலைவியை நோக்கி, “அவர் விலங்கினமும் தமது கடமையைஆற்றும் காட்சி கண்டு தாமும் தம் கடனாற்றத் துணிவராதலின் மீளார்”என்று தோழி கூறியது.)
 213.    
நசைநன் குடையர் தோழி ஞெரேரெனக் 
    
கவைத்தலை முதுகலை காலி னொற்றிப் 
    
பசிப்பிணிக் கிறைஞ்சிய பரூஉப்பெருந் ததரல் 
    
ஒழியி னுண்டு வழுவி னெஞ்சிற் 
5
றெறித்துநடை மரபிற்றன் மறிக்குநிழ லாகி 
    
நின்றுவெயில் கழிக்கு மென்பநம் 
    
இன்றுயின் முனிநர் சென்ற வாறே. 

என்பது ‘நம்பெருமான், நம்பொருட்டு இடைநின்று மீள்வர்’ எனக்கவன்ற தலைமகட்குத் தோழி உரைத்தது.