பக்கம் எண் :


401


இல்லறம் புரியும் கடமையை நினைந்து அதற்கு உரிய பொருள் தேடச்சென்று அது முற்றியே மீள்வர்” என்பது தோழியின் கருத்து.

    தான் பாலை நில நிகழ்ச்சிகளை அறியாளாதலின் அறிந்தார் வாய்க்கேட்டுள்ளே னென்பாள் ‘என்ப’ என்றாள்.

    மேற்கோளாட்சி 2. கலையென்னும் ஆண்மைப் பெயர் புல்வாய்க்கு வந்தது(தொல். மரபு. 46, பேர்.) 5. ‘மறியென்னும் இளமைப் பெயர் புல்வாய்க்கு வந்தது (தொல். மரபு. 12,பேர்.)

    ஒப்புமைப் பகுதி 1. தலைவனது நசை: குறுந். 37:1, ஒப்பு.

    2. கவைத்தலை முதுகலை: “கவைமருப் பெழிற்கலை” (அகநா. 395:8) ஒற்றி: அகநா. 2:14.

    3. ததரல்: அகநா. 257:16.7. இன்றுயில் முனிநர்: குறுந். 39:4.

(213)
  
(தலைவியின் வேறுபாடு கண்டு தாய் முதலியோர் வெறி யாட்டெடுத்த இடத்து, “இவளுக்குத் தழையுடையுதவி அன்பு செய்தான் ஒருவன் இருப்ப, அதனை அறியாது இது முருகனால் வந்தது என மயங்கி வெறியெடுப்பதனால் பயனில்லை” என்று தோழி கூறி உண்மையை வெளிப்படுத்தியது.)
 214.   
மரங்கொல் கானவன் புனந்துளர்ந்து வித்திய 
    
பிறங்குகுர லிறடி காக்கும் புறந்தாழ் 
    
அஞ்சி லோதி யசையியற் கொடிச்சி 
    
திருந்திழை யல்குற்குப் பெருந்தழை யுதவிச் 
5
செயலை முழுமுத லொழிய வயல 
    
தரலை மாலை சூட்டி 
    
ஏமுற் றன்றிவ் வழுங்க லூரே. 

என்பது தோழி வெறியாட்டு எடுத்துக் கொண்ட விடத்து அறத்தொடுநின்றது.

கூடலூர் கிழார்.

    (பி-ம்.) 6. ‘சூடி’.

    (ப-ரை.) மரம் கொல் கானவன் - மரங்களை வெட்டியகுறவன், புனம் துளர்ந்து வித்திய- கொல்லையை உழுதுவிதைத்த, பிறங்கு குரல் இறடி - விளங்குகின்ற கதிரைஉடைய தினையை, காக்கும் - காவல் செய்யும், புறம் தாழ்அம் சில் ஓதி - புறத்தின் கண்ணே தாழ்ந்த அழகிய சிலவாகியகூந்தலையும், அசைஇயல் - மெலிந்த சாயலையும் உடைய,கொடிச்சி - தலைவியினது, திருந்து இழை - செவ்விதாகஅமைத்த ஆபரணத்தை அணிந்த, அல்குற்கு -, பெரு தழை