பக்கம் எண் :


403


    4. அல்குற்குத் தழை : குறுந். 125:3, ஒப்பு.

    5. முழுமுதல்: குறுந். 255:2, 361:4.

    4-5. தலைவன் அசோகந்தழை உதவல்: “கையது செயலையந்தழையே” (தமிழ் நெறி. மேற்.) 6. அரலை: நற். 121:4.

(214)
  
(தலைவன் பிரிந்திருந்த காலத்தில் வருந்திய தலைவியை நோக்கி,“உன்னுடைய துன்பம் நீங்கும்; தலைவர் இன்று வந்து விடுவார்” என்று தோழி உறுதி கூறியது.)
 215.   
படரும் பைபயப் பெயருஞ் சுடரும் 
    
என்றூழ் மாமலை மறையு மின்றவர் 
    
வருவர்கொல் வாழிதோழி நீரில் 
    
வறுங்கயந் துழைஇய விலங்குமருப் பியானை 
5
குறும்பொறை மருங்கி னமர்துணை தழீஇக் 
    
கொடுவரி யிரும்புலி காக்கும் 
    
நெடுவரை மருங்கிற் சுரனிறந் தோரே. 

என்பது பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது.

மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் (பி-ம். மதுரையளக்கர் ஞாழர் மள்ளர், மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார்.)

    (பி-ம்.) 1. ‘பயப்பயப்’, ‘பைப்பைய’, ‘பையப்பயப்’; 6. ‘கொடுவரை’.

    (ப-ரை.) தோழி-, படரும் பைபய பெயரும் - துன்பமும்மெல்ல மெல்ல நீங்கும்; சுடரும் என்றூழ் - ஒளி விடுகின்றசூரியன், மா மலை மறையும் - பெரிய அத்தகிரியின் கண்மறையா நின்றது; ஆதலின், நீர் இல் வறு கயம் துழைஇய -நீர் இல்லாத வறிய குளத்தைத் துழாவிய, இலங்கு மருப்புயானை - விளங்கிய கொம்புகளை உடைய ஆண் யானைகள்,குறு பொறை மருங்கின் - குறிய குண்டுக் கற்களுக்கு அருகில்,அமர் துணை தழீஇ - தாம் விரும்புகின்ற பிடிகளைத் தழுவி,கொடு வரி இருபுலி - வளைந்த கோடுகளை உடைய பெரியபுலி தாக்குதலினின்றும், காக்கும் - பாதுகாக்கின்ற, நெடுவரைமருங்கின் - உயர்ந்த மலைப் பக்கத்தில் உள்ள, சுரன்இறந்தோர் - பாலை நிலத்தைக் கடந்து சென்றோராகிய,அவர் - அத் தலைவர், இன்று வருவர்--; வாழி - நீ வாழ்வாயாக!

     (முடிபு) தோழி, படரும் பெயரும்; என்றூழ் மறையும்; சுரனிறந்தோராகிய அவர் இன்று வருவர்; வாழி!