மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் (பி-ம். மதுரையளக்கர் ஞாழர் மள்ளர், மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார்.) (பி-ம்.) 1. ‘பயப்பயப்’, ‘பைப்பைய’, ‘பையப்பயப்’; 6. ‘கொடுவரை’.
(ப-ரை.) தோழி-, படரும் பைபய பெயரும் - துன்பமும்மெல்ல மெல்ல நீங்கும்; சுடரும் என்றூழ் - ஒளி விடுகின்றசூரியன், மா மலை மறையும் - பெரிய அத்தகிரியின் கண்மறையா நின்றது; ஆதலின், நீர் இல் வறு கயம் துழைஇய -நீர் இல்லாத வறிய குளத்தைத் துழாவிய, இலங்கு மருப்புயானை - விளங்கிய கொம்புகளை உடைய ஆண் யானைகள்,குறு பொறை மருங்கின் - குறிய குண்டுக் கற்களுக்கு அருகில்,அமர் துணை தழீஇ - தாம் விரும்புகின்ற பிடிகளைத் தழுவி,கொடு வரி இருபுலி - வளைந்த கோடுகளை உடைய பெரியபுலி தாக்குதலினின்றும், காக்கும் - பாதுகாக்கின்ற, நெடுவரைமருங்கின் - உயர்ந்த மலைப் பக்கத்தில் உள்ள, சுரன்இறந்தோர் - பாலை நிலத்தைக் கடந்து சென்றோராகிய,அவர் - அத் தலைவர், இன்று வருவர்--; வாழி - நீ வாழ்வாயாக!
(முடிபு) தோழி, படரும் பெயரும்; என்றூழ் மறையும்; சுரனிறந்தோராகிய அவர் இன்று வருவர்; வாழி!