ஓக்கூர் மாசாத்தி. (பி-ம்.) 1. ‘பழமழை கலித்த’; 3. ‘அருவிசேர்’; 4. ‘பருவீ’.
(ப-ரை) தோழி-, பொருள் பிரிந்தோர் - பொருள்ஈட்டி வரும் பொருட்டு நம்மை இங்கு வைத்துப் பிரிந்ததலைவர், பழமழை கலித்த - பழைய மழையினால் தழைத்த,புது புனம் வரகின் - புனத்தில் உள்ள புதிய வரகினது,இரலை மேய்ந்த குறைதலை பாவை இருவி - ஆண் மான்மேய்ந்தமையால் குறைதலை உடைய நுனியை உடையகதிர் அரிந்த தாள், சேர் மருங்கின் - சேர்ந்த பக்கத்தில், பூத்தமுல்லை - மலர்ந்த முல்லைக் கொடியினது, வெருகு சிரித்தன்ன - காட்டுப் பூனை சிரித்தாற் போன்ற தோற்றத்தைஉடைய, பசு வீ மெல் பிணி குறு முகை - செவ்விப் பூவின்மெல்லிய பொதிதலை உடைய சிறிய அரும்புகள், அவிழ்ந்த -மலர்ந்த, நறு மலர் புறவின் - நறிய மலர்களை உடையமுல்லை நிலத்தில், வண்டு சூல் மாலையும் வாரார் - வண்டுகள்அம் மலரை ஊதும் பொருட்டுச் சுற்றுகின்ற மாலைக்காலத்திலும் வாராராயினார், கண்டிசின் - இதனைக் கருதுவாயாக.