பக்கம் எண் :


414


    4.ஆடுடை இடைமகன்: நற். 266:3; “அ, உ அறியா வறிவிலிடைமகனே” (யா.கா.மேற்.)

    4-5.இடையன் முல்லைப் பூ அணிதல்: குறுந். 358:7.

    5.பசுமுகை - போது; குறுந். 323:5

(221)
  
(தலைவியும் தோழியும் நீராடி ஒருங்கிருந்த இடத்து அத்தோழியின்பால் தலைவிக்குளதாய ஒற்றுமையை அறிந்து, “இவளே தலைவியைநாம் பெறுதற்குரிய வாயில்; இனி இவள் வாயிலாக நாம் இரந்து குறைபெறுதும்” என்று தலைவன் நினைந்தது.)
 222.   
தலைப்புணைக் கொளினே தலைப்புணைக் கொள்ளும் 
    
கடைப்புணைக் கொளினே கடைப்புணைக் கொள்ளும் 
    
புணைகை விட்டுப் புனலோ டொழுகின் 
    
ஆண்டும் வருகுவள் போலு மாண்ட 
5
மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைச் 
    
செவ்வெரி நுறழுங் கொழுங்கடை மழைக்கட் 
    
டுளிதலைத் தலைஇய தளிரன் னோளே. 

என்பது பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுத்தல்.

சிறைக்குடி யாந்தையார்.

    (பி-ம்.) 1. ‘புணைகொளினே’, ‘புணைகொளினே’; 3. ‘புனல்கைவிட்டுப்’.

    (ப-ரை.) மாண்ட - மாட்சிமைப்பட்ட, மாரி பித்திகத்து - மழைக் காலத்தில் மலரும் பிச்சியினது, நீர் வார் கொழுமுகை - நீர் ஒழுகும் வளவிய அரும்பினது, செ வெரிந் உறழும் - சிவந்த புறத்தை யொத்த, கொழு கடை மழை கண் - கொழுவிய கடையையும் குளிர்ச்சியையும் உடைய கண்களையும்,துளி தலை தலைஇய - மழைத்துளி தன்னிடத்தே பெய்யப்பெற்ற, தளிர் அன்னோள் - தளிரைப் போன்ற மென்மையையும் உடைய தலைவி, தலை புணை கொளின் தலைபுணை கொள்ளும் - தெப்பத்தின் தலைப்பை இத்தோழிகைக்கொண்டால் தானும் அதன் தலைப்பைக் கைக் கொள்வாள்; கடைபுணை கொளின் கடை புணை கொள்ளும் - இவள் தெப்பத்தின் கடைப்பகுதியைப் பிடித்துக் கொள்ளின்தலைவியும் அதன் கடைப் பகுதியைக் கொள்வாள்; புணைகைவிட்டு - தெப்பத்தைக் கைசோர விட்டு, புனலோடுஒழுகின் - நீரோடு இவள் சென்றால், ஆண்டும் வருகுவள்போலும் - அங்கும் தலைவி வருவாள் போலும்.