பரணர். (பி-ம்) 4. ‘தெழுகளிறு’ 5. ‘குழையகக் கோட்டியோர்’, ‘கோடியோர்’ 6. ‘காதலர்க்கல்லென் றவ்வே’, ‘காதலர்க்கவ் வென்றவ்வே’, ‘நாம் வெங்காதலர்க்கவ்வென் றவ்வேய.
(ப-ரை.) கரு கால் வேம்பின் ஒள் பூ யாணர் -கரிய தாளை உடைய வேப்ப மரத்தின் ஒள்ளிய பூவின் புதுவருவாயானது, என்னை இன்றியும் - என்னுடைய தலைவன் இல்லாமலும், கழிவது கொல் - செல்வதுவோ? கொடியோர் நா- அயலாராகிய கொடிய மகளிருடைய நாக்கள், காதலர் அகல - என் காதலர் என்னை நீங்கிச் செல்ல, ஆற்று அயல் எழுந்த - ஆற்றங்கரையில் முளைத்து வளர்ந்த, வெள் கோடு அதவத்து - வெள்ளிய கொம்புகளை உடைய அத்தி மரத்தினது, எழு குளிறு மிதித்த - உண்ண விரும்பிய ஏழு நண்டுகளால் மிதிக்கப்பட்ட, ஒரு பழம் போல - ஒற்றைப் பழமானது குழைவது போல, குழைய - நான் வருந்தும்படி, கல்லென்ற - அலர்கூறிக் கல்லென்று முழங்கின.
(முடிபு) ஒண்பூ யாணர் கழிவது கொல்லோ? காதலர் அகலுதலால் குழையக் கொடியோர்களின் யா கல்லென்றன.
(கருத்து) தலைவர் வாராமையின் ஊரினர் பழி கூறுதல் அடங்கவில்லை.