பக்கம் எண் :


472


   
"கேள்கே டூன்றவுங் கிளைஞ ராரவும் 
   
 கேளல் கேளிர் கெழீஇயின ரொழுகவும் 
   
 ஆள்வினைக் கெதிரிய வூக்கமொடு"          (அகநா. 93:1-3)  

என்பவற்றைக் காண்க.

    காமர் - காமம் மருவிய என்பதன் விகாரமாக்கி, விருப்பம் பொருந்திய எனப் பொருள் உரைத்தலும் பொருந்தும். பொருட் பிணி - பொருளிடத்துநெஞ்சு பிணித்தல் (கலி. 4:25, ந.)

    தன் கடனை அறிந்து அதனை முற்ற ஆற்றும் யானையைக் காண்பாராதலின், இல்லறத்திற்கு உரியன ஆற்றும் பொருட்டுப் பொருள் தேடச் சென்ற அவர் தம் வினைமுற்றிய பின்னரே மீள்வர் என்பது குறிப்பு.

    அறம் புரிவதில் தலைவியும் மனம் ஒத்த தன்மையினளாகித் தலைவனுக்குத் துணை செய்பவளாதலின், "அவர் இடை நின்று மீண்டால், அறம் செய்தலிற் குறை நேருமன்றே" எனக் கவன்றாள்.

    தாம் சென்ற இடத்துக் காட்சிகள் அவருடைய கடனை நினைவுறுத்து மாதலின் சோர்வின்றி எண்ணிய எண்ணியாங்கெய்தி வருவரெனத் தோழி துணிவுறுத்தினாள்.

    ஒப்புமைப் பகுதி 1. முழுமுதல்: குறுந். 214:5, 361:4.

    4. யானையின் நிரை: குறுந். 180:2, ஒப்பு.

    1-5. யானையும் யாமரமும்: குறுந். 37:2-4, ஒப்பு.

    7. பொருட்பிணி: குறுந். 344:7, 350:8; நற். 46:11, 71:1, 113:5; ஐங். 355:2; கலி.4:25; அகநா.43:14, 51:8.

    8. நாம் வெங் காதலர்: கலி. 27:26. மு.நற். 186:9-10.

(255)
  
(பொருள்வயிற் பிரிய எண்ணிய தலைவன் தன் கருத்தைத் தலைவிக்கு உணர்த்த, அவள் வெய்துற்று அழுதாளாக, அது கண்ட தலைவன் செலவு தவிர்ந்து கூறியது.)
 256.   
மணிவார்ந் தன்ன மாக்கொடி யறுகை 
    
பிணிகான் மென்கொம்பு பிணையொடு மார்ந்த 
    
மானே றுகளுங் கானம் பிற்பட 
    
வினைநலம் படீஇ வருது மவ்வரைத் 
5
தாங்க லொல்லுமோ பூங்குழை யோயெனச் 
    
சொல்லா முன்னர் நில்லா வாகி 
    
நீர்விலங் கழுத லானா 
    
தேர்விலங் கினவாற் றெரிவை கண்ணே. 

என்பது பொருள் விலக்கப்பட்ட கிழவன் செலவழுங்கியது.

    (பொருள் முயற்சியினின்றும் விலக்கப்பட்ட தலைவன் செல்லுதலினின்றும் நீங்கியது.)