பக்கம் எண் :


474


    ஒப்புமைப் பகுதி 1. அறுகின் கொடிக்கு நீலமணி: "பழங்கன்று கறிக்கும் பயம்பம லறுகைத், தழங்குகுரல் வானின் றலைப்பெயற் கீன்ற, மண்ணுமணி யன்ன மாயிதழ்ப் பாவை" (அகநா. 136:11-3.)

    2-3. பிணையும் மானும் உகளுதல்: குறுந். 65:1-3, ஒப்பு. பிணையும் மானேறும்: குறுந். 319:1. 1-3. அறுகம்புல்லை மான் பிணையோடு உண்ணல்: அகநா. 23:7-9; பு.வெ. 277.

    5. காமந் தாங்குதல்: குறுந். 241:1. தாங்கல் ஒல்லுமோ: அகநா. 333:5.

(256)
  
(வரைவுணர்த்திய தோழியை நோக்கி, "தலைவனைக் கண்ட போது இன்பமும் அவனைக் காணாத போது துன்பமும் உடையேனாக இருந்தேன். இனி எப்பொழுதும் உடனுறைதலால் இன்பமே உண்டாகும்" என்பதுபடத்தலைவி கூறியது.)
 257.   
வேரு முதலுங் கோடு மொராங்குத் 
    
தொடுத்த போலத் தூங்குபு தொடரிக்  
    
கீழ்தாழ் வன்ன வீழ்கோட் பலவின்  
    
ஆர்கலி வெற்பன் வருதொறும் வரூஉம் 
5
அகலினு மகலா தாகி 
    
இகலுந் தோழிநங் காமத்துப் பகையே. 

என்பது வரைவுணர்த்திய தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

உறையூர்ச் சிறுகந்தன்.

    (ப-ரை.) தோழி-, நம் காமத்துப் பகை - நம்மிடத்து உள்ள காமமாகிய பகை, வேரும் முதலும் கோடும் - வேரிலும் அடிமரத்திலும் கிளையிலும், ஒராங்கு - ஒரு படியாக, தொடுத்த போல - தொடுத்து வைத்தன போல, தூங்குபு தொடரி - தொங்கித் தொடர்ந்து, கீழ் தாழ்வன்ன - கீழே தாழ்ந்தாற் போன்ற, வீழ்கோள் பலவின் - தணிந்த குலைகளை உடைய பலா மரத்தினை உடைய, ஆர்கலி வெற்பன் - ஆரவாரத்தை உடைய மலைக்குத் தலைவன், வருதொறும் - இங்கே வருந்தோறும், வரூஉம் - வெளிப்படும்; அகலினும் - அவன் அகன்றாலும், அகலாதாகி - போகாததாகி, இகலும் - மாறுபடும்; இஃது என்ன வியப்பு!

    (முடிபு) தோழி, காமத்துப் பகை, வெற்பன் வருதொறும் வரூஉம்;அகலினும் இகலும்.

    (கருத்து) தலைவனைப் பிரிதலின்றி ஒன்றியிருத்தலே எனக்கு இன்பம் பயப்பது.