பக்கம் எண் :


483


    (வி-ரை.) பழமழை பொழிந்த காலத்தில் எள் பதன் அழிந்தது. பதன் அழிந்துருகுதல் உள்ளீடு அழுகி விடுதலால் ஒன்றும் இல்லையாதல்.

    ஐயென: அநுகரணவொலி. தனிமைத் துன்பத்தை மிகுதிப் படுத்தலின் யாமத்தை அஞ்சுவரு பொழுதென்றாள். கரையும் பொழுதென இயைக்க.

    காவலர் என்றது நாழிகைக் கணக்கரை. அவர் இரவில் துயிலாது நாழிகை வட்டிலைக் கூர்ந்து நோக்கி யாமக் கணக்கை அறிவிப்பர்; அவர்கள் துயிலாது இருத்தலைப் போல யானும் தலைவன் வரும் பொழுதை நினைந்து நினைந்து துயிலாது இருந்தேன் என்றாள். வருந்துதல் இன்னும் வந்திலரே என்றும், காவலர் ஆதியோர் கண்டனரோ என்றும் வருந்துதல்.

    இதனால் தான் படும் துன்பத்தையும் அச்சத்தையும் கூறி, வரைதலே இதற்குப் பரிகாரம் என்று தலைவி புலப்படுத்தினாள்.

    மேற்கோளாட்சி 3. முனைவென்னும் உரிச்சொல் முனிவென்னும் குறிப்பை உணர்த்தியது ( தொல். உரி. 89, இளம், 90, சே, தெய்வச். 88, ந,) ஆவென்னும் பெயர் எருமைக்கும் வந்தது ( தொல். மரபு. 60, பேர்.)

    ஒப்புமைப் பகுதி1. பழமழை: குறுந். 251:5, ஒப்பு.

    2. சில் பெயர் கடைநாள்: குறுந். 332:1. 3. காரான்: குறுந். 181:3, ஒப்பு.

    செங்கட்காரான்: "செங்கணெருமை" (மலைபடு. 472), "செந்நோக்கெருமை" (ஐந். எழு. 46.) 3. மு. அகநா. 46:1.

    4.நள்ளென் யாமம்: குறுந். 6:1, ஒப்பு. 160:4, ஒப்பு.

    5-6. தலைவி துஞ்சாமை: குறுந். 6:4, ஒப்பு.

    6-7. நாழிகைக் கணக்கர் கணக்காய்தல்: முல்லைப். 55-8; சிலப். 5:49, அடியார்; கம்ப. மாரீசன். 129.

(261)
  
(தலைவி தலைவனுடன் போவதற்கு நேர்ந்த தோழி, அதனைத் தலைவிக்கு உணர்த்தியது.)
 262.   
ஊஉ ரலரெழச் சேரி கல்லென 
    
ஆனா தலைக்கு மறனி லன்னை 
    
தானே யிருக்க தன்மனை யானே 
    
நெல்லி தின்ற முள்ளெயிறு தயங்க 
5
உணலாய்ந் திசினா லவரொடு சேய்நாட்டு 
    
விண்டொட நிவந்த விலங்குமலைக் கவாஅற் 
    
கரும்புநடு பாத்தி யன்ன 
    
பெருங்களிற் றடிவழி நிலைஇய நீரே. 

என்பது உடன்போக்கு நேர்ந்த தோழி கிழத்திக்கு (பி-ம். தோழிக்குக்கிழத்தி) உடன்போக்கு உணர்த்தியது.

பாலை பாடிய பெருங்கடுங்கோ.