களிற்றின் அடிவழி நிலைஇய நீராயினும் அது தலைவனோடு உண்ணும்பொழுது தலைவிக்கு மிக இனியதாகும்;
| "அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பைத் |
| தேன்மயங்கு பாலினு மினிய வவர்நாட் |
| டுவலைக் கூவற் கீழ |
| மானுண் டெஞ்சிய கலிழி நீரே" (ஐங். 203) |
இச் செய்யுளை அடியொற்றி வந்த பழஞ்செய்யுள் ஒன்று வருமாறு;
| "ஊருஞ் சேரியு மலரெழ யாயும் |
| தானே யிருக்க தன்மனை யானே |
| திருந்துவேல் விடலையொடு கெழீஇ |
| அருஞ்சுரஞ் சேறல் புரிந்தன னினியே" (தமிழ்நெறி. மேற்.92) |
மேற்கோளாட்சி 1. ஊராருடைய கூற்று, கொண்டெடுத்து மொழியப்பட்டது ( தொல். செய். 192, பேர். 191, ந; இ.வி. 563); அசையும் ஒரோவழிச் சீராம் (யா.வி. 95.)
2-3. இடையூறு பொருளின்கண் தலைவி போக்குடன்பட்டது ( தொல். பொருள். 31,ந.)
மு. போக்கு நேர்ந்தமை தோழி கூறியது (தொல். அகத். 39, ந.)
ஒப்புமைப் பகுதி 1. ஊருஞ் சேரியும் அலரெழல்: "ஊருஞ் சேரியு முடனியைந் தலரெழ", "ஊருஞ் சேரியு மோராங் கலரெழ" (அகநா, 220:1, 383:2.) அலராற் கல்லெனல்: (குறுந். 24:6); "இவ்வூர்க், கல்லென் கௌவை" (ஐங். 131:2-3.)
கல்லென்றல்: குறுந். 24:6, ஒப்பு; நற். 207:3, 215:7.
2. அன்னை அலைத்தல்: குறுந். 247:5, ஒப்பு.
அறனிலன்னை: குறுந். 244:6, ஒப்பு.
4. முள்ளெயிறு: குறுந். 286:1, நற். 120:11; கலி. 4:13. 104:18, 112:20; அகநா. 212:5; ஏலாதி.7; மணி. 18:71; சீவக. 491, 1099, 2732.
6. விண்டொட நிவந்த மலை: குறுந். 144:7, 285:8.
விலங்கு மலை: குறுந். 134:7, 144:7, மலைக் கவான்: குறுந். 353:2;நற். 32:1.
7. கரும்பு நடு பாத்தி: குறுந். 180:2, ஒப்பு; ஐங். 65:1; பதிற்.13:3.
7-8. "பெருங்களிறு மிதித்த வடியகத் திரும்புலி, ஒதுங்குவன கழிந்த செதும்ப லீர்வழி" (அகநா. 155;11-2.) மு. அகநா. 65.
(262)
(தாய் வெறியாட்டெடுக்கக் கருதி இருப்பதைத் தோழி தலைவிக்குக்கூறுவாளாகிச் சிறைப்புறத்தானாகிய தலைவனுக்கு உணர்த்தியது.)