பக்கம் எண் :


485


    களிற்றின் அடிவழி நிலைஇய நீராயினும் அது தலைவனோடு உண்ணும்பொழுது தலைவிக்கு மிக இனியதாகும்;

   
"அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பைத் 
   
 தேன்மயங்கு பாலினு மினிய வவர்நாட் 
   
 டுவலைக் கூவற் கீழ 
   
 மானுண் டெஞ்சிய கலிழி நீரே"              (ஐங். 203)  

இச் செய்யுளை அடியொற்றி வந்த பழஞ்செய்யுள் ஒன்று வருமாறு;

   
"ஊருஞ் சேரியு மலரெழ யாயும் 
   
 தானே யிருக்க தன்மனை யானே  
   
 திருந்துவேல் விடலையொடு கெழீஇ 
   
 அருஞ்சுரஞ் சேறல் புரிந்தன னினியே"      (தமிழ்நெறி. மேற்.92)  

    மேற்கோளாட்சி 1. ஊராருடைய கூற்று, கொண்டெடுத்து மொழியப்பட்டது ( தொல். செய். 192, பேர். 191, ந; இ.வி. 563); அசையும் ஒரோவழிச் சீராம் (யா.வி. 95.)

    2-3. இடையூறு பொருளின்கண் தலைவி போக்குடன்பட்டது ( தொல். பொருள். 31,ந.)

    மு. போக்கு நேர்ந்தமை தோழி கூறியது (தொல். அகத். 39, ந.)

    ஒப்புமைப் பகுதி 1. ஊருஞ் சேரியும் அலரெழல்: "ஊருஞ் சேரியு முடனியைந் தலரெழ", "ஊருஞ் சேரியு மோராங் கலரெழ" (அகநா, 220:1, 383:2.) அலராற் கல்லெனல்: (குறுந். 24:6); "இவ்வூர்க், கல்லென் கௌவை" (ஐங். 131:2-3.)

    கல்லென்றல்: குறுந். 24:6, ஒப்பு; நற். 207:3, 215:7.

    2. அன்னை அலைத்தல்: குறுந். 247:5, ஒப்பு.

    அறனிலன்னை: குறுந். 244:6, ஒப்பு.

    4. முள்ளெயிறு: குறுந். 286:1, நற். 120:11; கலி. 4:13. 104:18, 112:20; அகநா. 212:5; ஏலாதி.7; மணி. 18:71; சீவக. 491, 1099, 2732.

    6. விண்டொட நிவந்த மலை: குறுந். 144:7, 285:8.

    விலங்கு மலை: குறுந். 134:7, 144:7, மலைக் கவான்: குறுந். 353:2;நற். 32:1.

    7. கரும்பு நடு பாத்தி: குறுந். 180:2, ஒப்பு; ஐங். 65:1; பதிற்.13:3.

    7-8. "பெருங்களிறு மிதித்த வடியகத் திரும்புலி, ஒதுங்குவன கழிந்த செதும்ப லீர்வழி" (அகநா. 155;11-2.) மு. அகநா. 65.

(262)
  
(தாய் வெறியாட்டெடுக்கக் கருதி இருப்பதைத் தோழி தலைவிக்குக்கூறுவாளாகிச் சிறைப்புறத்தானாகிய தலைவனுக்கு உணர்த்தியது.)