பக்கம் எண் :


487


   
"கவின்பெறு துருத்தியும்"              (முருகு. 223),  
   
"நல்யாற்று நடுவும்"                  (பரி. 4:67)  

என்பவற்றால் அறியலாகும்.

    வழிப்போவார் செல்லும் வழியில் உள்ள கவர்த்த இடம் என்றலும் ஒன்று.

    மறியறுத்துத் தினைப்பிரப்பை வைத்து முருகன் முதலியோரை வழிபடுதலை, "சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து" (முருகு. 218) என்பதனால் உணரலாகும்.

    தலைவனையே தெய்வமாகக் கொள்ளும் கற்புடையாராதலின், தாய் வெறியாட்டெடுக்குங்கால் வணங்கும் தெய்வங்களை ‘வேற்றுப் பெருந்தெய்வம்' என்றாள். அவற்றை, ‘நோய்க்கு மருந்தாகாத் தெய்வம்'எனவே நோய்க்கு மருந்தாகும் தெய்வம் ஒன்று உண்டென்பது பெறப்படும்; அத் தெய்வமே தலைவன்;

   
"நோய்க்குமருந் தாகிய கொண்கன்"          (ஐங். 101:5)  

என வருதல் காண்க.

    நாடனைப் பிழையேமென்றது நாடன் திறத்துள்ள அன்பினில் மாறுபடேமென்றவாறு.

    இதற்பட - இத்துன்பத்திலே பட வென்பதும் பொருந்தும்.

    இதனால், தலைவன் வரைந்து கொள்ள வேண்டியதன் இன்றி அமையாமையைத் தோழி புலப்படுத்தினாள்.

    ஒப்புமைப் பகுதி 3. நோய்க்கு மருந்து: குறள். 1102; கம்ப. மிதிலைக். 80.

    1-3. தெய்வம், வழிபடத் தோன்றுதல்: முருகு.239-44; பரி.5:14-5.

    4. வேற்றுப் பெருந்தெய்வம்: குறிஞ்சிப். 6.

    6. நோதக்கன்று: குறுந். 78:4.

    6-7. வரையில் மழை விளையாடுதல்: குறுந். 108:1, ஒப்பு.

    மு. குறிஞ்சிப். 1-8; அகநா. 98,242.

(263)
  
தலைவனது பிரிவால் தலைவியினது மேனியின் நிறம் வேறுபடுதலைக் கண்டு கவன்ற தோழியை நோக்கி, "யான் அவர் கேண்மையின் உறுதியை அறிவேனாதலின் ஆற்றுவேன்" என்று தலைவி கூறியது.)
 264.   
கலிமழை கெழீஇய கான்யாற் றிகுகரை  
    
ஒலிநெடும் பீலி துயல்வர வியலி 
    
ஆடுமயி லகவு நாட னம்மொடு  
    
நயந்தனன் கொண்ட கேண்மை 
5
பயந்தக் காலும் பயப்பொல் லாதே.