கொல்லன் அழிசி. (பி-ம்.) 4.’யுண்ணிய’, ‘யுண்ணியர்’, ‘யுணீஇய’ 5.’யல்குலெம்’.
(ப-ரை.) நல் ஆன் தீ பால் - நல்ல பசுவின் இனிய பாலானது, கன்றும் உண்ணாது - அப்பசுவின் கன்றினாலும் உண்ணப்படாமல், கலத்தினும் படாது - கறக்கும் பாத்திரத்திலும் விழாமல், நிலத்து உக்காங்கு - தரையில் சிந்தி வீணானது போல, திதலை அல்குல் - என் மாமை கவின் - எனது மாமையாகிய பேரழகை, எனக்கும் ஆகாது - எனக்கு அழகு பயந்து நிற்பதாகாமலும், என்னைக்கும் உதவாது - என் தலைவனுக்கு இன்பம் பயவாமலும், பசலை உணீஇயர் வேண்டும் - பசலையானது தான் உண்ண விரும்பா நிற்கும்.
(முடிபு) பால் நிலத்து உக்காங்குப் பசலை மாமைக்கவினை உணீஇயர் வேண்டும்.
(கருத்து) தலைவனது பிரிவினால் மாமைக்கவின் அழியப் பசலை பரந்தது.
(வி-ரை.) கலம் - பால் கறக்கும் பாத்திரம்; “கறவைகன் றார்த்திக் கலநிறை பொழியும்” (மணி. 12:93) மாமை தலைவிக்கு அழகு பயந்து சிறப்புத் தருதலின், ‘எனக்கு மாகாது’என்றாள்; “தனக்கமைந் தன்றிவண் மாமைக் கவினே” (ஐங். 103:3-4). என்னை: குறுந். 24:2, வி-ரை. மாமை தலைவனுக்குப் பயன்படுதலாவது, அம் மாமைக் கவினை நோக்கி நோக்கி அவன் மகிழ்ச்சி பெறுதல்; “துறைவற், கினிய மன்றவென் மாமைக் கவினே” (ஐங். 146:2-3); “நுண்ணெழின் மாமைச் சுணங்கணியாகந்தம், கண்ணொடு தொடுத்தென நோக்கியும்” (கலித்.4:17-8) பசலை - பிரிவாற் றாமையால் உண்டாகும் வேறு பாடான பொன் நிறம். ‘பசலை உணீஇயர்’