பக்கம் எண் :


66


பசப்ப” (ஐங். 35:4, 144:3, 221:3): “செயலையந் தளிரேய்க்கு மெழினல மந்நலம், பயலையா லுணப்பட்டு”, “பன்னாளும் படரடப் பசலையா லுணப்பட்டாள், பொன்னுரை மணியன்ன மாமைக்கட் பழியுண்டோ” (கலி. 15:12-3, 48:16-7); “வாமான்றேர்க் கோதையை மான்றேர்மேற் கண்டவர், மாமையே யன்றோ விழப்பது - மாமையிற், பன்னூறு கோடி பழுதோவென் மேனியிற், பொன்னூறி யன்ன பசப்பு” (முத்.53); “பேர்கின் றதுமணிமாமை பிறங்கியள் ளற்பயலை, ஊர்கின்றது” (திவ். திருவிருத்தம், 12); “மாமை பொன்னிறம் பசப்ப” (பு.வெ.199).     (27)

  
(தலைவன் வரை பொருளுக்காகப் பிரிந்த காலத்தில், அவன் விரைந்து வாராமைபற்றிக் கவலையுற்ற தோழியை நோக்கி. “என் துன்பத்தை அறியாமல் துயில்கின்ற இவ்வூரின்றிறத்து யான் யாது செய்வேன்?” என்று தலைவி சினந்து கூறியது).
 28.    
முட்டு வேன்கொ றாக்கு வேன்கொல்
    
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்  
    
டாஅ வொல்லெனக் கூவு வேன்கொல் 
    
அலமர லசைவளி யலைப்பவென் 
5
உயவுநோ யறியாது துஞ்சு மூர்க்கே. 

என்பது வரைவிடை யாற்றாளாய்க் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

ஒளவையார்.

    (பி-ம்.) 1. ‘மூட்டுவேன்கொல்’ 2. ‘ஓரே யானும்’

    (ப-ரை.) அலமரல - சுழலுதலை உடைய, அசை வளி - அசைந்து வருகின்ற தென்றல் காற்று, அலைப்ப - வருத்தா நிற்க, என் உயவு நோய் அறியாது - எனது வருந்துதலை உடைய காம நோயை உணர்ந்து கொள்ளாமல், துஞ்சும் ஊர்க்கு - கவலையின்றித் தூங்கும் ஊரில் உள்ளாரை, யான், முட்டுவேன் கொல் - முட்டுவேனோ? தாக்குவேன் கொல் - தாக்குவேனோ? ஓர் பெற்றி மேலிட்டு - ஒரு தலைக்கீட்டை மேற்கொண்டு, ஆஅ ஒல்லென - ஆவென்றும் ஒல்லென்றும் ஒலி உண்டாக, கூவுவேன் கொல் - கூப்பிடுவேனோ? ஓரேன் - இன்னது செய்வது என்பதை அறியேன்.

    (முடிபு) ஊரை முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்? கூவுவேன் கொல்? ஓரேன்.

    (கருத்து) என்னுடைய நோயைத் தாயர் முதலியோர் அறியாமையின் யான் ஆற்றேன் ஆயினேன்.