பக்கம் எண் :


510


  
"நெய்த னெறிக்கவும் வல்ல னெடுமென்றோட் 
  
 பெய்கரும் பீர்க்கவும் வல்ல னிளமுலைமேற் 
  
 றொய்யி லெழுதவும் வல்லன்"          (கலி.18:2-3, 143:31-3.) 

என்பவற்றாலும் பெறப்படும்.

     அவையத்துச் சான்றோரிடம் தலைவியைப் பற்றிக் கூறி அவளைப் பெற விரும்பிக் கேட்டலைக் கலித்தொகை 139, 140-ஆம் செய்யுட்களால் உணரலாகும்.

     அழுங்கலூர் என்றது தோழியை. இவ்வூர் யாங்காவது கொல் எனக் கூட்டிப் பொருள் உரைத்தலும் பொருந்தும். மற்று, கொல், ஓ, தான், ஏ: அசை நிலைகள்.

     மேற்கோளாட்சி மு. தோழி சேட்படுத்திய வழித் தலைவன் பிற கூறியது (தொல். களவு. 11, இளம்); தோழி இவ்விடத்துக் காவலர் கடியரெனக் கூறிச் சேட்பட நிறுத்தலின் தனக்கு உண்டாகிய வருத்தத்தைப் பார்த்துத் தலைவன் மடல் மா ஏறுதலைக் கூறியது (தொல். களவு. 11, ந.)

     ஒப்புமைப் பகுதி 1. குறுமகள்: குறுந். 89:7. ஒப்பு, தலைவியின் பாவை: குறுந். 48:1, ஒப்பு. பாவை தைஇ: கலி. 56:7.

     1-2. "சாய்தாட் பிள்ளை தந்து கொடுத்தும்" (கல்லாடம்.)

     3. அறிதலும் அறியார்: நற். 106:1.

     3-4. தலைவன் தொய்யில் எழுதுதல்: கலி. 76:14-5, 144:34;சீவக. 108.1.

     5. அரசனது செங்கோலவையம்: மதுரைக். 492; நற். 90:12, 400:7-8;அகநா. 93:5; புறநா. 39:8-9, 71:7-9; சிலப். 5:135; பெருங். 1.34:25. 7-8. ஊர் பேதை, குறுந். 89:3, ஒப்பு.

(276)
  
(தலைமகன் குறித்துச் சென்ற பருவம் வருங்காலம் யாதென்று தோழி அறிவரை வினாவியது.)
 277.   
ஆசி றெருவி னாயில் வியன்கடைச் 
    
செந்நெ லமலை வெண்மை வெள்ளிழு ் 
    
தோரிற் பிச்சை யார மாந்தி 
    
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர் 
5
சேமச் செப்பிற் பெறீஇயரோ நீயே 
    
மின்னிடை நடுங்குங் கடைப்பெயல் வாடை 
    
எக்கால் வருவ தென்றி  
    
அக்கால் வருவரெங் காத லோரே. 

என்பது தலைமகன் பிரிந்தவழி, அவன் குறித்த பருவ வரவு தோழி அறிவரைக் (பி-ம். அறிவாரைக்) கண்டு வினாயது.

ஓரிற் பிச்சையார்.