பக்கம் எண் :


512


     ஆசில் தெருவென்றும், நாயில் வியன்கடை என்றும் சிறப்பித்த மையால் இங்கே கூறியது அந்தணர் தெருவென்று தோற்றுகின்றது;

  
"பைஞ்சேறு மெழுகிய படிவ நன்னகர் 
  
 மனையுறை கோழியொடு ஞமலி துன்னாது 
  
 வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும் 
  
 மறைகாப் பாள ருறைபதி"                  (பெரும்பாண். 298-301.) 

     ஆய் இல் கடையென வைத்து, செல்வம் சுருங்குதல் இல்லாதவாயில் என்று பொருளுரைத்தலும் பொருந்தும்; ஆய்தல் - சுருங்குதல் (தொல். உரி. 32.)

     செந்நெல் நெல் வகையில் உயர்ந்தது. பல வீடுகளில் சென்று ஐயம் பெற்றுண்ணும் இரவலரது பிச்சை போலாது ஒரு வீட்டில் பெற்றுண்ணும் பிச்சை ஆதலின், ‘ஓரிற் பிச்சை' என்றாள். ஆர - உள்ள நிறைவுண்டாக எனலும் ஒன்று.

     அற்சிரம் - முன்பனிக் காலம்; இஃது அச்சிரம் எனவும் வழங்கும். வெப்பத் தண்ணீர் - வெந்நீர்; தண்ணீர் என்பது நீரென்னுந் துணையாய் நின்றது.

     அறிவர் பெறும் உணவை ஓரிற் பிச்சை என்று சிறப்பித்தமையால் இச் செய்யுள் இயற்றிய புலவர் ஓரிற் பிச்சையார் என்று பெயர் பெற்றார்.

     ஒப்புமைப் பகுதி 1. நாயில் வியன் கடை: "பார்ப்பாரிற் கோழியு நாயும் புகலின்னா" (இன்னா. 3.)

     2. அமலை: "அமலைக் கொழுஞ்சோறு" (புறநா. 34;:4); "பெருஞ்சோற் றமலை" (மணி. 17:1.)

    1-3. அந்தணர் வீட்டுச் சோறும் நெய்யும்: "முந்துமுக் கனியினானா முதிரையின் முழுத்த நெய்யில், செந்தயிர்க் கண்டங் கண்ட மிடையிடை செறிந்த சோற்றில், தந்தமி லிருந்து தாமும் விருந்தொடுந் தமரினோடும், அந்தண ரமுத வுண்டி யயில்வுறு மமலை யெங்கும்" (கம்ப. நாட்டுப். 19.)

    5. பெறீஇயர்: குறுந். 75:4, ஒப்பு.

    6. தலைவி வாடைக்கு நடுங்கல்: குறுந். 103:4, ஒப்பு.

(277)
  
(தலைவன் பிரிந்திருந்த காலத்து, நீ ஆற்றுதல் வேண்டுமென்றுவற்புறுத்தும் தோழியை நோக்கித் தலைவி, "அவர் எம்மை நினையாதுகொடியராயினர்" எனக் கூறியது.)
 278.   
உறுவளி யுளரிய வந்தளிர் மாஅத்து  
    
முறிகண் டன்ன மெல்லென் சீறடிச்  
    
சிறுபசும் பாவையு மெம்மு முள்ளார் 
    
கொடியர் வாழி தோழி கடுவன் 
5
ஊழுறு தீங்கனி யுதிர்ப்பக் கீழிருந் 
    
தேற்பன வேற்பன வுண்ணும் 
    
பார்ப்புடை மந்திய மலையிறந் தோரே.