மதுரை மருதன் இளநாகனார். (பி-ம்.) 5. ‘மழைகெழு’, ‘மறைந்த’; 7. ‘அரும்பல் குன்றம’், ‘போக்கித’்.
(ப-ரை.) தோழி , மழை கழூஉ மறந்த மாஇரு துறுகல் -மழை கழுவுதலை மறந்த கரிய பெரிய பொற்றைக் கல், துகள் சூழ் யானையின் - புழுதி படிந்த யானையைப் போல, பொலிய தோன்றும் - விளங்கத் தோன்றுகின்ற, இரு பல்குன்றம் போகி - பெரிய பல மலைகளைக் கடந்து சென்று, திருந்து இறை பணைதோள் உள்ளாதோர் - இலக்கணத்தால் திருந்திய சந்துகளை உடைய மூங்கிலைப் போன்ற என் தோள்களை நினையாதோர், திரி மருப்பு எருமை இருள் நிறம் மை ஆன் - முறுக்கிய கொம்பையும் இருள் நிறத்தையும் உடைய எருமையினது, வரு மிடறு யாத்த - வளர்கின்ற கழுத்தின்கண் கட்டப்பட்ட, பகு வாய் தெள் மணி - பிளந்த வாயை உடைய தெளிந்த ஓசையை உடைய மணியானது, புலம்பு கொள் யாமத்து - தனிமையைக் கொண்ட நடு இரவில், இயங்கு தொறு - அவ்வெருமை நடக்கும் தோறும், இசைக்கும் - ஒலிக்கின்ற, இது பொழுது ஆகவும் - இக் காலம் தாம் வருதற்குரிய செவ்வியாக இருப்பவும், வாரார் - அவர் வாராராயினர்.
(முடிபு) போகி உள்ளாதோர், வாரார்.
(கருத்து) தலைவர் வருதற்குரிய செவ்வி இஃதாக இருந்தும் அவர் வந்திலரென ஆற்றேனாயினேன்.