3-4. வேப்பம் பூவை ஆடவர் அணிதல்: பெரும்பாண். 59-61.
1-4. பூக்களைப் பனந்தோட்டுடன் வைத்துச் சூடுதல்: "போர்படுமள்ளர் போந்தொடு தொடுத்த, கடவுள் வாகைத் துய்வீ", "நாறிணர்க்கொன்றை வெண்போழ்க் கண்ணியர்" (பதிற். 66:14-5, 67:13); "வட்கர்போகிய வளரிளம் போந்தை, உச்சிக் கொண்ட வூசி வெண்டோடு,வெட்சி மாமலர் வேங்கையொடு விரைஇச், சுரியிரும் பித்தை பொலியச்சூடி", "ஓங்குநிலை வேங்கை யொள்ளிணர் நறுவீப், போந்தையந் தோட்டிற் புனைந்தனர் தொடுத்து" (புறநா. 100:3-6, 265:3-4); "வட்கர்போகிய வான்பனந் தோட்டுடன், புட்கைச் சேனை பொலியச் சூட்டி .... .,... .... .... வஞ்சி சூடுதும்" (சிலப். 25:146-9.)
(281)
(தலைவன் வினைவயிற் பிரிந்த காலத்தில் அவன் கூறிய கார்ப்பருவம் வந்ததாக, "இப் பருவத்தின் அடையாளங்களைத் தாம் சென்ற இடத்தே கண்டு இனி நீ ஆற்றாய் என்பதறிந்து தலைவர் மீண்டு வருவார்" என்று தோழி தலைவிக்குக் கூறியது.) 282. | செவ்விகொள் வரகின் செஞ்சுவற் கலித்த் |
| கௌவை நாற்றின் காரிரு ளோரிலை் |
| நவ்வி நாண்மறி கவ்விக் கடன்கழிக்கும் |
| காரெதிர் தண்புனங் காணிற் கைவளை |
5 | நீர்திகழ் சிலம்பி னோராங் கவிழ்ந்த |
| வெண்கூ தாளத் தந்தூம்பு புதுமலர் |
| ஆர்கழல் புகுவ போலச் |
| சோர்குவ வல்ல வென்பர்கொ னமரே. |
| ் |
என்பது வினைவயிற் பிரிந்தவிடத்துத் தோழி கிழத்திக்கு உரைத்தது.
நாகம் போத்தன். (பி-ம்.) 3. ‘நன்மறி’; 5. ‘கவிந்த’; 7. ‘புகுவீபோலச்’; 8. ‘வென்பர்கொலவரே’.