பக்கம் எண் :


522


சென்ற தலைவர் என வினையாலணையும் பெயராக்குதலும் ஒன்று. முடை - தசை; ஆகுபெயர் (அகநா. 3:9. உரை.)

     வன்மை தெளியக் காட்டி என்றதனால் அவர் பிரிவின் காரணத்தை நன்கு அறிந்து ஆற்றினேன் என்பதும், பாலை வழியின் இயல்பைக் கூறியதனால் அவ்வழியின் ஏதமே ஆற்றாமைக்குக் காரணம் ஆவதென் பதும் புலப்படுத்தினாள்.

     ஒப்புமைப் பகுதி 4. வாழி தோழி: குறுந். 260:4, ஒப்பு.

     7. பருந்து முடை பார்த்திருத்தல்: "மான்றுவேட் டெழுந்த செஞ்செவி யெருவை ... ... ... புலவுப்புலி துறந்த கலவுக்கழி கடுமுடை, கொள்ளை மாந்தரி னானாது கவரும்" (அகநா. 3:5-10.)படுமுடை: நற்.164:8.

     5-7. ஆறலை கள்வர் செயல்: (குறுந். 274:3-4. 297:1-4, 331:1-3); "செங்கோல் வாளிக் கொடுவி லாடவர், வம்ப மாக்க ளுயிர்த் திறம் பெயர்த்தென", "இலைமாண் பகழிச் சிலைமா ணிரீஇய, அன்பி லாடவரலைத்தலிற் பலருடன், வம்பலர் தொலைந்த வருஞ்சுரக் கவலை" (நற். 164:6-7, 352:1-3); "அற்றம்பார்த் தல்குங் கடுங்கண் மறவர்தாம்,கொள்ளும் பொருளில ராயினும் வம்பலர். துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்துயிர் வௌவலின்" (கலி. 4:3-5); "இறந்தோர், கைப்பொரு ளில்லை யாயினு மெய்க்கொண், டின்னுயிர் செகாஅர் விட்டதந் தப்பற்கு", "அம்புதொடை யமைதி காண்மார் வம்பலர், கலனில ராயினுங் கொன்று புள் ளூட்டும், கல்லா விளையர்" (அகநா. 109:10-12, 375:3-5)

     மறவர் கொன்றமையாற் பட்டவர் தசையைப் பருந்து விரும்புதல்: "வடியாப் பித்தை வன்க ணாடவர். அடியமை பகழி யார வாங்கி,வம்பலர்ச் செகுத்த வஞ்சுவரு கவலைப், படுமுடை நசைஇய வாழ்க்கைச் செஞ்செவி, எருவைச் சேவல்", "வாங்குதொடை பிழையா வன்க ணாடவர், விடுதொறும் விளிக்கும் வெவ்வாய் வாளி, ஆறுசெல் வம்பல, ருயிர்செலப்,பெயர்பின்,பாறுனும், பயிர்ந்து படுமுடை கவரும்” (அகநா. 161:2- 6, 175:2-5); "செந்தொடை பிழையா வன்க ணாடவர், அம்புவிட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத், திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந் துயவும்" (புறநா. 3:20-22.)

(283)
  
(தலைவன் வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிந்த காலத்தில்,ஊரினர் அலரை அஞ்சிய தலைவியை நோக்கி, "இவ்வூரினர் அறிவிலர்போலும்!" என்று தோழி கூறியது.)
 284.    
பொருத யானைப் புகர்முகங் கடுப்ப ் 
    
மன்றத் துறுகன் மீமிசைப் பலவுடன் 
    
ஒண்செங் காந்த ளவிழு நாடன் 
    
அறவ னாயினு மல்ல னாயினும் 
5
நம்மே சுவரோ தம்மிலர் கொல்லோ  
    
வரையிற் றாழ்ந்த வால்வெள் ளருவி 
    
கொன்னிலைக் குரம்பையி னிழிதரும் 
    
இன்னா திருந்தவிச் சிறுகுடி யோரே.