பக்கம் எண் :


538


     ஒப்புமைப் பகுதி 3. தப்பல்: குறுந். 79:7, ஒப்பு.

     4. பொன் செய் பாவை கொடுத்தல்: அகநா. 127:8.

     8. பகை முக ஊர் துஞ்சாமை: குறுந். 91:7-8, ஒப்பு.

(292)
  
(பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனுக்குத் தூதாக வந்த தோழியைநோக்கி, “தலைவன் ஈண்டுறைவது தெரியின் பரத்தை இங்கு வந்துஅவனைக் கொண்டு செல்வள்” என்று கூறியது.)
 293.    
கள்ளிற் கேளி ராத்திரை யுள்ளூர்ப் 
    
பாளை தந்த பஞ்சியங் குறுங்காய் 
    
ஓங்கிரும் பெண்ணை நுங்கொடு பெயரும் 
    
ஆதி யருமன் மூதூ ரன்ன 
5
அயவெள் ளாம்ப லம்பகை நெறித்தழை 
    
தித்திக் குறங்கி னூழ்மா றலைப்ப 
    
வருமே சேயிழை யந்திற் 
    
கொழுநற் காணிய வளியேன் யானே. 

என்பது பரத்தையிற் பிரிந்து வந்த கிழவற்கு வாயிலாகப் புக்கத்தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

கள்ளிலாத்திரையன்.

     (பி-ம்.) 1. ‘ரார்த்திய’; 2. ‘பள்ளை தந்த’, ‘வஞ்சியங்’; 5. ‘வயல்வெள்’; 7. ‘வருமோ’; 8. ‘கொழுநர்க’்.

     (ப-ரை.) தோழி, கள்ளில் கேளிர் ஆத்திரை -கள்ளைக்குடிக்கும் விருப்பத்தை உடையவர்களது பயணம், உள்ஊர் பாளை தந்த பஞ்சி அம் குறு காய் - ஊரினகத்துள்ளபாளையினால் ஈனப்பட்ட நாரையுடைய குறிய காய்களைக்கொண்ட, ஓங்கு இரு பெண்ணை நுங்கொடு பெயரும் -உயர்ந்த கரிய பனையினது நுங்கைக் கைக்கொண்டுமீள்வதற்கு இடமாகிய, ஆதி அருமன் முது ஊர் அன்ன -ஆதி அருமனுக்குரிய பழைய ஊரைப் போன்ற, அயம்வெள் ஆம்பல் அம் பகை நெறி தழை - நீரில் வளர்ந்தவெள்ளாம்பலினது அழகிய மாறுபட்ட முழு நெறியைஉடைய தழையுடை, தித்தி குறங்கின் ஊழ் மாறு அலைப்ப -தேமலை உடைய துடையின்கண் முறையே மாறி மாறிஅசைய, செ இழை - பொன்னால் செய்த செவ்வியஅணிகலன்களை உடைய பரத்தை, அந்தில்-அவ்விடத்திலே,கொழுநன் காணிய - தலைவனைக் காணும் பொருட்டு,வரும் - வருவாள்; யான் அளியேன் - நான் இரங்கத் தக்கேன்.