பெரும்பாக்கன் (பி-ம். பெரும்பாகன்.) (பி-ம்.) 3. ‘அறுகழிச்’, ‘முணையிற’்; 4. ‘கண்ணார்’; 8. ‘நும்மிதிற்’,‘நும்மினிற்’, ‘நுமிதற்’.
(ப-ரை.) தோழி--, அம்ம - ஒன்று கூறுவன் கேட்பாயாக: புன்னை அலங்கு சினை இருந்த அம் சிறை நாரை -புன்னையினது அசைந்த கிளையினிடத்திருந்த அழகியசிறகையுடைய நாரை, உறுகழி சிறு மீன் முனையின் -மிக்க கழியிடத்துச் சிறுமீன் உணவை வெறுத்ததாயின்,செறுவில் - வயலிலுள்ள, கள் நாறு நெய்தல் கதிரொடுநயக்கும் - கள் மணக்கின்ற நெய்தற் பூவை நெற்கதிரோடு