பக்கம் எண் :


544


விரும்புகின்ற, தண் அம் துறைவன் காணின் - தண்ணியஅழகிய துறைவனைக் கண்டால், முன் நின்று - அவன்முன்னே நின்று, தொடியோள் இன்னள் ஆக - வளையைஅணிந்த தலைவி இத்தன்மை யுடையளாகும்படி, துறத்தல் -பிரிந்து செல்லுதல், நும்மின் தகுமோ - உமக்குத் தகுமோ,என்றனை துணிந்து கடிய கழறல் ஓம்புமதி - என்றுதுணிந்து கடுமையான சொற்களைக் கூறி இடித்துரைத்தலைப்பாதுகாப்பாயாக.

     (முடிபு) தோழி, துறைவற்காணின் முன்னின்று, “துறத்தல் தகுமோ?”என்றனை துணிந்து கழறல் ஓம்புமதி.

     (கருத்து) இங்ஙனம் பிரிந்து வருதல் பற்றித் தலைமகனை நீ கழறற்க.

     (வி-ரை.) வாழி: அசை நிலை. தொடியோள் இன்னளாக - தொடியை யணிந்த தலைவி அத்தொடியை யிழந்து மெலிந்து வருந்தும் இந்நிலையி னளாக.

     தோழி கழறாமை வேண்டுதல் தலைவி கருத்தன்று; சிறைப்புறத்தானாகிய தலைவன் தன் துயர்நிலையையறிதல் வேண்டுமென்பதே கருத்து.

     மேற்கோளாட்சி 5. தண்ணந்துறைவனென்றது விரிக்கும் வழி விரித்தது (தொல். எச்ச. 7, இளம், சே.)

     ஒப்புமைப் பகுதி 1. அம்ம வாழி தோழி: குறுந். 77:1, ஒப்பு.

     1-2. புன்னையில் நாரை இருத்தல்: குறுந். 236:4-5, ஒப்பு.

     4. கண்ணாறு நெய்தல்: சிலப். 7:33.

     7. இன்னள்: குறுந். 173:5, ஒப்பு.

     7-8. குறுந். 185:3.

(296)
  
(தோழி, “இனித் தலைவனுடன் சென்று அவனை மணந்து வாழ்தலே செயற்குரியது” என்று தலைவிக்குக் கூறியது.)
 297.    
அவ்விளிம் புரீஇய கொடுஞ்சிலை மறவர்  
    
வைவார் வாளி விறற்பகை பேணார் 
    
மாறுநின் றிறந்த வாறுசெல் வம்பலர் 
    
உவலிடு பதுக்கை யூரிற் றோன்றும் 
5
கல்லுயர் நனந்தலை நல்ல கூறிப் 
    
புணர்ந்துடன் போதல் பொருளென 
    
உணர்ந்தேன் மன்றவவ ருணரா வூங்கே. 

என்பது தோழி வரைவு மலிந்தது.

காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணன்.