விரும்புகின்ற, தண் அம் துறைவன் காணின் - தண்ணியஅழகிய துறைவனைக் கண்டால், முன் நின்று - அவன்முன்னே நின்று, தொடியோள் இன்னள் ஆக - வளையைஅணிந்த தலைவி இத்தன்மை யுடையளாகும்படி, துறத்தல் -பிரிந்து செல்லுதல், நும்மின் தகுமோ - உமக்குத் தகுமோ,என்றனை துணிந்து கடிய கழறல் ஓம்புமதி - என்றுதுணிந்து கடுமையான சொற்களைக் கூறி இடித்துரைத்தலைப்பாதுகாப்பாயாக.
(முடிபு) தோழி, துறைவற்காணின் முன்னின்று, “துறத்தல் தகுமோ?”என்றனை துணிந்து கழறல் ஓம்புமதி.
(கருத்து) இங்ஙனம் பிரிந்து வருதல் பற்றித் தலைமகனை நீ கழறற்க.
(வி-ரை.) வாழி: அசை நிலை. தொடியோள் இன்னளாக - தொடியை யணிந்த தலைவி அத்தொடியை யிழந்து மெலிந்து வருந்தும் இந்நிலையி னளாக.
தோழி கழறாமை வேண்டுதல் தலைவி கருத்தன்று; சிறைப்புறத்தானாகிய தலைவன் தன் துயர்நிலையையறிதல் வேண்டுமென்பதே கருத்து.
மேற்கோளாட்சி 5. தண்ணந்துறைவனென்றது விரிக்கும் வழி விரித்தது (தொல். எச்ச. 7, இளம், சே.)
ஒப்புமைப் பகுதி 1. அம்ம வாழி தோழி: குறுந். 77:1, ஒப்பு.
1-2. புன்னையில் நாரை இருத்தல்: குறுந். 236:4-5, ஒப்பு.
4. கண்ணாறு நெய்தல்: சிலப். 7:33.
7. இன்னள்: குறுந். 173:5, ஒப்பு.
7-8. குறுந். 185:3.
(296)
(தோழி, “இனித் தலைவனுடன் சென்று அவனை மணந்து வாழ்தலே செயற்குரியது” என்று தலைவிக்குக் கூறியது.) 297. | அவ்விளிம் புரீஇய கொடுஞ்சிலை மறவர் |
| வைவார் வாளி விறற்பகை பேணார் |
| மாறுநின் றிறந்த வாறுசெல் வம்பலர் |
| உவலிடு பதுக்கை யூரிற் றோன்றும் |
5 | கல்லுயர் நனந்தலை நல்ல கூறிப் |
| புணர்ந்துடன் போதல் பொருளென |
| உணர்ந்தேன் மன்றவவ ருணரா வூங்கே. |
என்பது தோழி வரைவு மலிந்தது.
காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணன்.