வெண்மணிப் பூதி. (பி-ம்.) 1. ‘இதுவுமற்’; 3. ‘இணர்வீழ்’; 5. ‘மன்னங்’; 8. ‘ஞெகிழ்பவென்றட’, ‘ஞெகிழ்பதட’.
(ப-ரை.) தோழி--, முதுநீர் புணரி திளைக்கும் -நிலத்திற்குப் பழையதாகிய கடலின் அலை அளவளாவுகின்ற, புள் இமிழ் கானல் - பறவைகள் ஒலிக்கின்ற கடற்கரைச்சோலையிலுள்ள, இணர் அவிழ் புன்னை எக்கர் நீழல் -பூங்கொத்துக்கள் மலர்ந்த புன்னை வளர்ந்த மேட்டிலுள்ளநிழலில், புணர் குறி வாய்த்த ஞான்றை - புணர்குறியைப்பெற்ற காலத்தில், எம் கண் - எம் கண்கள், கொண்கன்கண்டன - தலைவனைப் பார்த்தன; எம் செவி - எம்முடையகாதுகள், அவன் சொல் கேட்டன - அவனுடைய சொற்களைக் கேட்டன; எம் தட மெல் தோள் - எமது பரந்தமெல்லிய தோள்கள், அவன் மணப்பின் - அவன் எம்மைமணந்தால், மாண் நலம் எய்தி - மாட்சிமைப்பட்ட அழகைப்பெற்று, தணப்பின் - அவன் பிரிந்தால், ஞெகிழ்ப -சோர்வன; இது எவன் - இஃது என்ன வியப்பு!
(முடிபு) தோழி, எம் கண் கண்டன; செவிகேட்டன; தோள் மணப்பின்நலம் எய்தித் தணப்பின் ஞெகிழ்ப.
(கருத்து) தலைவன் இடையிட்டு வருவதால் யான் வருந்துவேனாயினேன்.