பக்கம் எண் :


551


     மண்டிலமென்பது வட்டம்; கடல்சூழ் மண்டிலமென்றமையின்நிலவட்டமாயிற்று. அன்னம் மணலிற் சேக்கு மென்றது கடலுக்கு அடை.ஏகாரங்கள், ஆல்: அசை நிலைகள்.

     மேற்கோளாட்சி 2. மூக்காலறியப்பட்ட பொதுத்தன்மை வந்தது (தொல். உவம. 3, இளம்.) “ஆம்பலென்றது முதலாகு பெயர் (நன். 289,மயிலை. 290, சங்கர.; இ.வி. 192.) மு. தலைவன் நயப்பும் வன்புறையுங் கூறியது (தொல். களவு. 10, ந.); தலைவன் பிரிவுணர்த்தல் (களவியற். 23.)

     ஒப்புமைப் பகுதி 1. குவளை நாறும் கூந்தல்: குறுந். 270:6-8, ஒப்பு.

     குவையிருங் கூந்தல்: குறுந். 52:3.

     2. ஆம்பல் நாறும் வாய்: “ஆம்ப னாறுந் தேம்பொதி நறுவிரைத்,தாமரைச் செவ்வாய்” (சிலப். 4:73-4); “ஆம்பனா றமுதச் செவ்வாய்”,“ஆம்ப னாறு மரக்கார் பவளவா யாரமுதன்னார்” (சீவக. 561, 1656);நாலடி. 396.

     3-4. தேமலுக்குப் பூந்தாது: “அம்பூந் தாதுக் கன்ன, நுண்பஃறித்திமாஅ யோளே” (நற். 157:9-10.)

     7-8. குறுந். 267:1-6, ஒப்பு.

(300)
  
(தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தில், “நீ ஆற்றும்வன்மை யுடையாயோ?” என வினாவிய தோழிக்கு, “தலைவன்வாராவிடினும், அவன் வருவானென்னும் நினைவினால் நான்துயின்றிலேன்” என்று தலைவி கூறியது.)
 301.    
முழவுமுத லரைய தடவுநிலைப் பெண்ணைக் 
    
கொழுமட லிழைத்த சிறுகோற் குடம்பைக் 
    
கருங்கா லன்றிற் காமர் கடுஞ்சூல் 
    
வயவுப்பெடை யகவும் பானாட் கங்குல் 
5
மன்றம் போழு மினமணி நெடுந்தேர் 
    
வாரா தாயினும் வருவது போலச் 
    
செவிமுத லிசைக்கு மரவமொடு 
    
துயிறுறந் தனவா றோழியென் கண்ணே. 

என்பது வரைவிடை வைப்ப, “ஆற்ற கிற்றியோ?” என்ற தோழிக்குக்கிழத்தி சொல்லியது.

குன்றியன்.

     (பி-ம்.) 2. ‘சிறுபொற’்; 5. ‘போழு மணியுடை’; 8. ‘துயின்மறந் தனவால்’.

     (ப-ரை.) தோழி--, முழவுமுதல் அரைய - முழவினைப்போன்ற அடி மரத்தையுடைய, தடவு நிலை பெண்ணை -வளைந்த நிலையையுடைய பனையினது, கொழு மடல்இழைத்த - கொழுவிய ஓலையின் கண்ணே இயற்றிய,